Advertisment

ஸ்ரீதேவியை தொடர்ந்து 'இச்சாதாரி' நாகமாக நடிக்கும் பிரபல நடிகை!

shradha kapoor

Advertisment

மனித உருவமாக மாறும் சக்திகொண்ட 'இச்சாதாரி' நாகம், தனது ஜோடியைக் கொன்ற ஐந்து மனிதர்களைப் பழிவாங்கும் கதை 'நாகின்'. 1976ஆம் ஆண்டு இந்தியில் வெளியான இப்படம் செம ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து தமிழில் கமல்ஹாசன் நடிப்பில், 'நீயா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, அதுவும் ஹிட்டானது.

இந்த 'இச்சாதாரி' நாகம் பழிவாங்கும் கதையை மையமாக வைத்து தொடர்ச்சியாக பல வடிவங்களில் படங்கள் வெளியாகின. நடிகை ஸ்ரீதேவியும் இந்தியில் நாகினாக நடித்திருந்தார். அவர் நடிப்பில் வெளியான முதல் பாகம் செம ஹிட் அடித்ததை அடுத்து, இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. ஆனால், அது பெரும் தோல்வியைச் சந்தித்தது.

திரைப்படத்தில் நாகின் கதையை வைத்து உருவாக்கப்பட்ட படங்களுக்கு பின் 2015ஆம் ஆண்டு இந்தி சீரியலும் இந்தக் கருவில் எடுக்கப்பட்டு வெற்றியடைந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகும் இந்த சீரியலானது இந்தியா முழுதும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

Advertisment

இந்நிலையில் நாகின் கருவைக் கொண்டு மீண்டும் திரைப்படம் எடுக்க தயாரிப்பாளர் நிகில் திவிவேதி திட்டமிட்டுள்ளார். விஷால் ஃபியூரியா இதை இயக்குகிறார். ஷ்ரத்தா கபூர் இந்தப் படத்தில் நாகினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுபற்றிபேசியுள்ள ஷ்ரத்தா, "திரையில் நாகினாக நடிப்பது எனக்கு மிகவும் அலாதியானது. ஸ்ரீதேவி நடித்த நாகின் திரைப்படங்களைப் பார்த்து, அவரை ஆராதித்துதான் வளர்ந்தேன். அதேபோல இந்தியப் பாரம்பரியத்தில் இருக்கும் நாட்டுப்புறக் கதைகளின் அடிப்படையில், ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எப்போதும் இருந்தது. ரசிகர்களை என்றும் அதிசயிக்க வைத்த ஒரு மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடிப்பதுபோல இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

sridevi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe