Skip to main content

அனுமதி பெறாமல் அரசு வளாகங்களில் படப்பிடிப்பு - விஜய் ஆண்டனி படக்குழுவினரை கைது செய்த போலீசார்

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

Shooting in government premises without permission Police arrested Vijay Antony film crew

 

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி அனைத்துத் தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன்  இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

 

இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி விஜய் ஆண்டனி இயக்கியும் நடித்தும் இசையமைத்தும் வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை ட்ரோன் கேமரா மூலம் 'பிச்சைக்காரன் 2' படக்குழுவைச் சேர்ந்த மூவர் அனுமதியின்றி படம் பிடித்துள்ளதாக, அந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

 

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பிற்காக சென்னை ரிப்பன் மாளிகை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கட்டடத்தை ட்ரோன் கேமரா மூலம் படம்பிடிக்க முறையாக போலீசாரிடம் அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால் அனுமதி பெறாமல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை ட்ரோன் கேமரா மூலம் படம்பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது. 

 

அவர்கள் பயன்படுத்திய ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு காவல் நிலைய ஜாமீனில் விடுவித்துள்ளனர். மேலும் அரசுக்குச் சொந்தமான எல்லா இடங்களிலும் அனுமதி பெறாமல் படம்பிடித்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

vijay antony Pichaikkaran 2 ott release update

 

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி அனைத்துத் தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த மாதம் 19 ஆம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் இப்படம் தெலுங்கிலும் வெளியானது. அங்கு வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இயக்கி இசையமைத்து அதில் நடித்தும் இருந்தார். மேலும் காவ்யா, ராதா ரவி, மன்சூர் அலி கான், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து யாசகர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தார். திருப்பதிக்குச் சென்று அங்குள்ள யாசகர்களுக்கு போர்வை, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார். அடுத்து, ஆந்திராவின் ராஜமுந்திரியில் சாலையோரம் அமர்ந்திருந்த யாசகர்கள் சிலரை, ஸ்டார் உணவகத்துக்கு அழைத்துச் சென்று அவர் கையாலே பரிமாறி விருந்து வழங்கினார். 

 

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 18 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஹாட்ஸ்டார் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து அதற்கான போஸ்டரை பகிர்ந்துள்ளது. மேலும் விஜய் ஆண்டனியும் அந்த போஸ்டரை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  
 

 

 

 

Next Story

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் ஆண்டனி உதவி?

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

Vijay Antony help for cancer patients

 

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி அனைத்துத் தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் இப்படம் 12 நாளில் ரூ.35 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தெலுங்கிலும் வெளியான இப்படம் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இயக்கி இசையமைத்து அதில் நடித்தும் உள்ளார். மேலும் காவ்யா, ராதா ரவி, மன்சூர் அலி கான், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து யாசகர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். அண்மையில் திருப்பதிக்குச் சென்று அங்குள்ள யாசகர்களுக்கு போர்வை, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார். அடுத்து, ஆந்திராவின் ராஜமுந்திரியில் சாலையோரம் அமர்ந்திருந்த யாசகர்கள் சிலரை, ஸ்டார் உணவகத்துக்கு அழைத்துச் சென்று அவர் கையாலே பரிமாறி விருந்து வழங்கினார். 

 

இந்நிலையில் ஆந்திராவில் உள்ள ஜி.எஸ்.எஸ் மருத்துவமனையில், புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு உதவி செய்யுமாறு விஜய் ஆண்டனி சொல்லியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.