Skip to main content

"அடேய் விடுங்கடா..." - கடுப்பான ஷில்பா ஷெட்டி

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

shilpa shetty furiously shouts  at photographer

 

இந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் ஷில்பா ஷெட்டி தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது இந்தியில் 'நிகம்மா' படத்தைத் தொடர்ந்து 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். ரோஹித் ஷெட்டி மற்றும் சுஷ்வந்த் பிரகாஷ் இயக்கிவரும் இந்த சீரிஸில் சித்தார்த் மல்ஹோத்ரா, விவேக் ஓபராய், ஈஷா தல்வார் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இந்த சீரிஸ் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

 

ad

 

இந்நிலையில் ஷில்பா ஷெட்டி புகைப்படக் கலைஞர்களைத் திட்டிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஷில்பா ஷெட்டியைப் பார்த்த புகைப்படக் கலைஞர்கள், அவரைச் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்கின்றனர். அவர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு காரில் ஏற முயல்கிறார் ஷில்பா ஷெட்டி. அப்போதும் அவரைப் பின்தொடர்ந்து ஒருவர் புகைப்படம் எடுக்க, உடனே கடுப்பான ஷில்பா ஷெட்டி “அடேய் விடுங்கடா...” என்ற தொனியில் கடுமையான வார்த்தைகளால் பேசுகிறார். 

 

முன்னதாக திரைப் பிரபலங்கள் பலருக்கும் இதுபோன்று நடந்துள்ளது. அவரைப் புகைப்படக் கலைஞர்கள் பின் தொடர்ந்து புகைப்படம் எடுப்பதும், உடனே பிரபலங்கள் கடுப்பாகி அவர்களைக் கடுமையாக விமர்சிப்பதும் வழக்கமாக நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷில்பா ஷெட்டியின் ரூ.97.79 கோடி சொத்துகள் முடக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
shilpa shetty ed fraud case update

2017ஆம் ஆண்டு பிட் காயின் மூலம் 6,600 கோடி மோசடி செய்ததாக வேரியபிள் டெக் நிறுவனம் மீது டெல்லி போலிஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிறுவனத்தை அஜய் பரத்வாஜ், விவேக் பரத்வாஜ், சிம்பி பரத்வாஜ், மகேந்தர் பரத்வாஜ் மற்றும் மறைந்த அமித் பரத்வாஜ் ஆகியோர் நடத்தி வந்த நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவுசெயப்பட்டது. இதையடுத்து இந்த விவாகாரத்தில் அமலாக்கத்துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு இந்த மோசயில் தொடர்பு இருப்பதற்கான சில ஆதாரங்கள் கிடைத்தன. மறைந்த அமித் பரத்வாஜிடமிருந்து, ரூ.150 கோடிக்கும் மேல் ராஜ் குந்த்ரா பெற்றதாக தெரிய வந்தது. அதனடிப்படையில் ராஜ் குந்த்ராவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.   

shilpa shetty ed fraud case update

இந்த நிலையில் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான ரூ. 97.79 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ஒரு பங்களா, ராஜ் குந்த்ரா பெயரில் உள்ள பங்குகள், ஷில்பா ஷெட்டி பெயரில் மும்பை ஜூஹுவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்டவைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அஜய் பரத்வாஜ், மகேந்திர பரத்வாஜ் ஆகியோர் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஷில்பா ஷெட்டி புகார் எதிரொலி - சிக்கிய 2 பேர்

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

Robbery at Shilpa Shetty house

 

இந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் ஷில்பா ஷெட்டி தற்போது 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். ரோஹித் ஷெட்டி மற்றும் சுஷ்வந்த் பிரகாஷ் இயக்கி வரும் இந்த சீரிஸ் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. மேலும் சுகீ என்ற இந்தி படத்தில் நடித்துள்ள நிலையில் கன்னடத்திலும் ஒரு படம் நடிக்கிறார். 

 

நடிப்பதில் பிசியாக இருக்கும் ஷில்பா ஷெட்டி கடந்த 8 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக இத்தாலி சென்ற அவர் இன்னும் தனது குடும்பத்துடன் அங்கு இருக்கிறார். இதனிடையே கடந்த வாரம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் திருடு போயுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

 

இந்நிலையில் அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் 2 பேருக்கு அந்த திருட்டில் தொடர்புள்ளதை அறிந்து அவர்களை இன்று கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.