Skip to main content

பிரபல நடிகர் மீது பாலியல் புகார் கூறிய பாலிவுட் நடிகை!

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

vdgasd

 

‘ஹவுஸ்ஃபுல்’, ‘ஹவுஸ்ஃபுல் 2’ உள்ளிட்ட பாலிவுட் படங்களின் இயக்குனரும், நடிகருமான சாஜித்கான் மீது பிரபல கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா பாலியல் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் 2005ஆம் ஆண்டு சாஜித்கானை சந்தித்தேன். அப்போது என்னிடம் ஆபாசமாக நடந்துகொண்டார். நான் இதற்காக இங்கு வரவில்லை என்று அவரிடம் தெரிவித்தேன்.

 

இந்தப் பாலியல் குற்றச்சாட்டை அப்போது சொல்லி இருந்தால், அவருக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர்கள் பேசியிருப்பார்கள். ஹிந்தி திரையுலக மாஃபியா வலிமையானது. நான் சாஜித் மீது பழி சுமத்தவில்லை. நடந்த உண்மையைக் கூறுகிறேன். என் தந்தை இறந்த துக்கத்தில் இருந்தபோது படம் குறித்து பேசுவதாக என்னை சாஜித்கான் அழைத்து தவறாக நடந்துகொண்டார். நான் மறுத்தும் பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்தார்'' என்று தெரிவித்துள்ளார்.

 

இந்தப் புகார் ஹிந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏற்கனவே சாஜித்கான் மீது நடிகைகள் ராச்சல், டிம்பிள் பாவ்லா, உதவி இயக்குனர் சலோனி சோப்ரா உள்ளிட்ட பலர் பாலியல் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீ டூ விவகாரம் - அர்ஜுன் மீது புகார் கொடுத்த நடிகைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

arjun mee too case update

 

கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரன் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் மீது மீ டூ இயக்கத்தில் புகார் அளித்திருந்தார். அதில், நிபுணன் படத்தில் அவருக்கு மனைவியாக நடித்த நிலையில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார்.

 

இது தென்னிந்திய திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கப்பன் பார்க் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அதன் பேரில் நடிகர் அர்ஜுன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனை மறுத்த அர்ஜுன், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

 

இதையடுத்து, கப்பன் பார்க் காவல் துறையினர் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் புகார் மீது 3 ஆண்டுகள் விசாரணை நடத்தி 2021 ஆம் ஆண்டு நவம்பரில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், நடிகர் அர்ஜுன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி இவ்வழக்கிலிருந்து அர்ஜுன் விடுவிக்கப்பட்டார். பின்பு நீதிமன்றத்தின் உத்தரவை ஸ்ருதி ஹரிஹரன் எதிர்த்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பெங்களூருவில் உள்ள 8வது கூடுதல் தலைமை நீதிமன்றம் நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

 


 

Next Story

"உடல் ரீதியாக மட்டுமல்ல..." - ‘மீ டூ’ குறித்து சாய் பல்லவி

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

sai pallavi about mee too

 

சாய் பல்லவி கடைசியாக 'கார்கி' படத்தில் நடித்திருந்தார். பாலியல் குற்றத்தைப் பற்றி பேசியிருக்கும் இப்படம் கடந்த வருடம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' படத்தில் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் பழங்குடியின பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. 

 

ad

 

இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் தனது சினிமா அனுபவங்களைப் பற்றி பேசிய சாய் பல்லவி மீ டூ முன்னெடுப்பு குறித்தும் பேசியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் "உடல் ரீதியாக மட்டுமல்ல வார்த்தைகளால் திட்டி ஒருவரை அசௌகரியமாக உணர வைப்பதும் ஒரு வகையான துன்புறுத்தல் தான்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஆவணம் செய்ய எளிதாக இருக்கும் வழிதான் மீ டு. இதன் மூலம் பல பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை பொது வெளியில் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.