Advertisment

இரண்டு டோஸுக்கு பிறகும் கரோனா! - கவலையில் பிரபல நடிகை!

hrdhd

Advertisment

கடந்த சில மாதங்களாக இந்தியாவை உலுக்கிவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இருப்பினும், தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாகப் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.

தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், பிக்பாஸ் 3 போட்டியாளரும், நடிகையுமான ஷெரின் கரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸை சமீபத்தில் செலுத்திக் கொண்டார். இந்நிலையில் நடிகை ஷெரீனுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் தற்போது கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 3 - 4 நாட்களில் என்னைச் சந்தித்தவர்கள் விரைவாகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe