sharukhan about jawan release

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான்' படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தைரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

Advertisment

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கு வழக்கம் போல் பட்டாசு வெடித்து மேல தாளத்துடன் திரையரங்கம் முன் கூடி படத்தை கொண்டாட்டத்துடன் வரவேற்றனர். ரசிகர்களுடன் அட்லீ, அனிருத், உள்ளிட்ட பிரபலங்கள் முதல் காட்சியை பார்த்து ரசித்தனர். மேலும் அட்லீக்கு, லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு, கீர்த்தி சுரேஸ், அனிருத் என பலரும் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisment

இந்நிலையில் ஷாருக்கான் தற்போது படம் வெளியானது தொடர்பாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த எக்ஸ் தள பதிவில், "நேரம் ஒதுக்கி, மகிழ்ச்சியுடன் திரையரங்கிற்கு சென்று அதே மகிழ்ச்சியுடன் படம் முடிந்து வெளியிலும் கொண்டாடுகிற ஒவ்வொரு ரசிகர்களுக்கும் எனது நன்றி" என நெகிழ்ச்சியுடன் சில வார்த்தைகளை குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.