Skip to main content

"பயமுறுத்தும் சினிமா உலகில் நுழைந்தபோது..."- ஷாருக்கான் உருக்கம்!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

srk

 

பழம்பெரும் ஹிந்தி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனும், நடிகர் ரன்பிர் கபூரின் தந்தையுமான நடிகர் ரிஷி கபூர் கடந்த 2018- ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 


இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். பின்னர் மும்பையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்த 67 வயதான ரிஷி கபூருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை ரிஷி கபூர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக அவருடைய இறுதி அஞ்சலி உடனடியாக நடைபெற்று தகனம் செய்யப்பட்டது. பலரும் சமூக வலைத்தளங்களின் மூலமாக அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக இருப்பதால் தில்லியில் இருக்கும் அவருடைய மக்களால் மும்பையில் நடைபெற்ற இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள முடியாமல் வீடியோ காலில் பார்த்தார். 

 

 


இந்த நிலையில் நேற்றிரவு மிகவும் உருக்கமாக ஷாருக்கான், ரிஷி கபூர் குறித்து ஒரு நீண்ட பதிவைப் பதிவிட்டுள்ளார். அதில், "ஒரு இளைஞனாக பயமுறுத்தும் இந்த சினிமா உலகில் நுழைந்தபோது, நான் பார்க்கப்பட்ட விதம் எனக்குப் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியது. எனக்குப் போதிய திறமை இல்லையோ என்ற அச்சம் ஏற்பட்டது. தோல்வி என்பது எனக்கு ஒரு பிரச்சினையாய் இருக்கவில்லை. ஏனெனில் நான் தோற்றாலும் மிகப்பெரிய நடிகரான ரிஷி கபூருடன் இணைந்து நடித்திருந்தேன்.

முதல்நாள் படப்பிடிப்பில், என்னுடைய சீன் முடிவதற்காக காத்திருந்த ரிஷி கபூர் பின்னர் தனது முகத்தில் அந்தப் புகழ்பெற்ற சிரிப்புடன் என்னிடம் ‘நீ மிகவும் சுறுசுறுப்புடன் இருக்கிறாயே’ என்று கூறினார். அப்போதே நான் ஒரு நடிகனாகிவிட்டேன்.

சில மாதங்களுக்கு முன்பு நான் அவரை சந்தித்து என்னை அந்தப் படத்தில் ஏற்றுக் கொண்டமைக்காக நன்றி கூறினேன். அவர் எனக்கு எந்த விதத்தில் உந்துசக்தியாக இருந்தார் என்பது குறித்து அவருக்கே தெரியவில்லை. அடுத்தவர் வெற்றியில் மகிழ்ச்சி கொள்ளும் மனம் சிலருக்கு மட்டுமே உள்ளது.
 

http://onelink.to/nknapp


பல விஷயங்களுக்காக அவரை நான் மிஸ் செய்கிறேன். அவற்றில் முக்கியமானது ஒவ்வொரு முறை நாங்கள் சந்திக்கும்போதும் என் தலையில் அவர் அன்பான முறையில் தடவிக் கொடுப்பதை. நான் இப்போது இருக்கும் நிலைக்கு காரணமான ஆசீர்வாதமாக அதை நான் எப்போதும் என் இதயத்தில் வைத்திருப்பேன். எப்போதும் அன்பு, நன்றி, அதீத மரியாதையுடன் உங்களை மிஸ் செய்வேன் சார்" என்று பதிவிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரிஹானா கலை நிகழ்ச்சியும் ஷாருக்கானின் டான்ஸும் - வைரலாகும் வீடியோ

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
rihanna sharukhan anandh ambani wedding dance video

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில் ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடக்கிறது. குஜராத் ஜாம் நகரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று இந்திய பிரபலங்களில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, சானியா நேவால் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர். பாலிவுட் பிரபலங்களில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இயக்குநர் அட்லீயும் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டுள்ளார். 

இவர்களோடு பிரபல பாப் பாடகி ரிஹானா கலந்துகொண்டுள்ளார். அவரது கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மேலும் இரவு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பாலிவுட் நட்சத்திரங்களோடு நடனமாடினார். ஜான்வி கபூருடன் அவர் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் நிகழ்ச்சியில் ஷாருக்கான் ஆடிய வீடியோவும் வைராகி வருகிறது.  

பாப் பாடகி ரிஹானா கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அனுபவத்தை சொல்லும் ராஜ்குமார் ஹிரானி - ஷாருக்கானின் 'டங்கி'

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Shah Rukh Khan, Rajkumar Hirani in Dunki second trailer released

 

பிரபல இந்தி இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் படம் 'டங்கி'. இதில் டாப்ஸி, போமன் இரானி மற்றும் விக்கி கௌஷல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரிக்கும் இப்படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற 21 ஆம் தேதி வெளியாகிறது. 

 

இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வரை 64 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூட்யூபில் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முன்னோட்டத்தில், பஞ்சாபில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்று நண்பர்கள் மனோ, சுகி, புக்கு, மற்றும் பாலி ஆகியோர் அடங்கிய லண்டனுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற பொதுவான கனவைக் கொண்ட குழுவை ஷாருக்கான் கதாபாத்திரம் சந்திக்கிறது. பின்பு வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் நான்கு நண்பர்களைப் பின்தொடர்ந்து இந்தக் கதை செல்கிறது. ஏற்கனவே இப்படத்தின்  ஒரு ட்ரைலரும் இரண்டு பாடல்களும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.