Skip to main content

ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கும் படத்தின் பெயர் இதுதானா? இந்தியளவில் ட்ரெண்ட்...

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற ஷங்கரின் பட்டறையிலிருந்து கடந்த 2013ஆம் ஆண்டு ராஜா ராணி எனும் படத்தை இயக்கியவர் அட்லி. முதல் படம் போலவே தெரியாத அளவிற்கு அத்தனை சிறப்பாக அந்த படத்தை இயக்கியிருந்தார். படமும் செம ஹிட் அடித்ததை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி என்றொரு படத்தை இயக்கினார். இந்த படமும் விஜய் நடித்த படங்களின் வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து ஒரு சாதனையை செய்தது. தன்னுடைய குருநாதார் ஷங்கரை வசூல் வேட்டையில் மிஞ்சிவிடுவார் அட்லி என்கிற அளவிற்கு தன்னுடைய இரண்டாவது படத்திலேயே பேசப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போதுவரை இயக்கியுள்ள இரண்டு படங்களுமே நடிகர் விஜய்யை வைத்துதான்.
 

atlee sharuk khan

 

 

இப்படி ஒவ்வொரு படத்திலும் விஜய் என்னும் பெரிய நடிகருக்கு தேவையான மாஸ், அவருடைய பார்க்க வரும் குடும்ப ரசிகர்களுக்கு தேவையான கருத்து, செண்டிமெண்ட் என்பதில் மட்டும் கவனம் செலுத்தி கதைகளிலும், திரைக்கதையிலும் பெரிதாக சிரமம் இல்லாமல் வசூலில் சாதனை படைத்து வரும் இவருடைய படங்கள், அடுத்து அட்லி யாருடன் கூட்டணி சேரப்போகிறார் என்று முன்பே கிசுகிசுக்கப்பட்டாலும் தற்போது அதிகாரப்பூர்வ தகவலாக வெளிவரவில்லை.

பல வருடங்களாக ஷாருக்கான் ஒரு மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர் அதற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வேஸ்ட்டாகி வருகிறது. இந்நிலையில் தனக்கு ஒரு நல்ல வெற்றியை அட்லி கொடுப்பார் என்கிற நம்பிக்கையில் ஷருக்கும் அட்லியும் ஒன்றாக இணைந்து படம் பணிபுரிய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் படத்தின் பெயர் சங்கி என தகவல் வெளியாகியிருப்பதாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. தற்போது அந்த செய்தி இந்தியளவில் ட்ரெண்டாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆமாம், வருகிற நவம்பர் 2ஆம் தேதி ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தம்பி, தங்கைகளே...” - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
vijay wishes 10 students for public exam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (25.03.20240) முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் அல்லாது திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ராஷ்மிகா மந்தனா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமாகிய விஜய் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை,  நாளை எழுதவுள்ள என் அருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.