வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு ஷாந்தனுவும் பாக்யராஜுவும் இணைந்து படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இப்படத்தை இயக்க கே.பாக்யராஜ், சாந்தனு, அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கித்யங்களையும் நகைச்சுவை மாறாமல், சற்றும் விரசம் இல்லாமல் சுவராஸ்யமாக காட்சிப்படுத்த இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தின் துவக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சாந்தனு, பாக்யராஜ், அதுல்யா மற்றும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துக்கொண்டனர். ரமேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவில், தரண் இசையமைப்பில் இப்படம் உருவாக இருக்கிறது.