Skip to main content

ஷகிலா மரணம் என வதந்தி பரப்பியவருக்கு நன்றி தெரிவித்த ஷகிலா!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

Shakeela

 

மலையாளத் திரையுலகு மூலம் திரைத்துறையில் அறிமுகமான ஷகிலா, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற இந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துவரும் ஷகிலா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துவருகிறார். சமீபத்தில் அவர் பங்கெடுத்த ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

இந்த நிலையில், ஷகிலா மரணமடைந்துவிட்டதாக மர்ம நபர் ஒருவர் சமூகவலைதளங்களில் தகவல் பரப்பிவிட்டார். அத்தகவலின் உண்மைத் தன்மையை அறியாமல் பலரும் ஷேர் செய்ய ஆரம்பிக்க, அத்தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீபோல பரவியது. இது நடிகை ஷகிலாவின் கவனத்திற்கும் வர, இதுகுறித்து விளக்கமளித்து அவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அக்காணொளியில், தான் நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள ஷகிலா, இத்தகவல் பரவ ஆரம்பித்த பிறகு நலம் விசாரித்து நிறைய தொலைபேசி அழைப்புகள் தனக்கு வந்ததாகவும், ரசிகர்களை என்னைப் பற்றி மீண்டும் நினைக்க வைத்ததற்காக அந்த மர்ம நபருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பேசியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"என்னை ஏற்கமறுப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை" - ஷகீலா

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

actress shakeela ban to participate movie event

 

‘ஒரு அடார் லவ்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஓமர் லுலு, ‘நல்ல சமயம்’ என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்துள்ளார். இப்படம் வருகிற 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. அந்த வகையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா கேரளா, கோழிகோட்டில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


 
இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக நடிகை ஷகிலா அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், வணிக வளாகம் அவருக்கு அனுமதி மறுத்துவிட்டது. மேலும் ஷகிலா இல்லாமல் விழாவை நடத்தி கொள்ளும்படி வணிக வளாகம் தரப்பு சொல்ல, ஷகிலா இல்லாமல் விழா நடைபெறாது என முடிவெடுத்து விழாவை ரத்து செய்தது படக்குழு. இதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

 

இது குறித்து ஷகிலா கூறுகையில், "இது எனக்குப் புதிதல்ல. இதுபோன்று அவமானங்களை பலமுறை சந்தித்துள்ளேன். என்னை ஏற்கமறுப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை" என்றார். இதற்கு வணிக வளாகம், பாதுகாப்பு காரணங்களுக்காகவே அப்படிச் செய்யப்பட்டது" என விளக்கம் அளித்துள்ளனர்.

 

 

Next Story

பாராட்டுகளைப் பெறும் நடிகை ஷகிலாவின் உதவி..!

Published on 31/05/2021 | Edited on 31/05/2021
cssavaz

 

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை காரணமாகத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். 

 

fbsfsdbs

 

மேலும் சில பிரபலங்கள் மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் செய்து வரும் நிலையில் 'குக் வித் கோமாளி 2' மூலம் மீண்டும் புகழடைந்த நடிகை ஷகிலா தற்போது சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாகச் சாலையோரம் வசிக்கும் உணவின்றி தவித்த ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் பேசும்போது.. “உங்களுக்கு இருக்கும் இரண்டு கைகளில், ஒன்றை உங்களுக்காகவும், மற்றொரு கையை பிறருக்கு உதவுவதற்காகவும் பயன்படுத்துங்கள். உங்களால் இயன்ற அளவுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார், ஷகிலாவின் இந்த உதவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.