Skip to main content

ஷகிலாவின் பயோபிக்கை இணையத்தில் வெளியிடப் பேச்சுவார்த்தை! 

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

rithcha chadda

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ள நிலையில் பொழுதுபோக்கு இடங்களுக்குச் சிறிது காலம் வரை அனுமதி வழங்கப்படாது என்று எதிர்பார்க்கப்டுகிறது.

 

இதனால் தியேட்டர்கள் எப்போது திறக்கப்பட்டு, படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் முடித்துவைக்கப்பட்ட படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டு வருகின்றனர். பெரிய மார்க்கெட் உள்ள திரைப்படங்கள் திரையரங்கில்தான் வெளியிடுவோம் என்று காத்திருக்கின்றனர்.

 

அந்தவகையில், அடுத்ததாக கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதில் ஷகிலா வேடத்தில் இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார். இந்திரஜித் ரங்கேஷ் இயக்கியுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகை ஷகிலா மீது தாக்குதல்!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
actress Shakila issue

நடிகை ஷகிலா மீது அவரது வளர்ப்பு மகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் நடிகை ஷகிலா வசித்து வருகிறார். இந்த சூழலில் நடிகை ஷகிலாவுக்கும், அவரது வளர்ப்பு மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஷகிலாவின் வளர்ப்பு மகள் சீத்தல், ஷகிலாவை அடித்து கீழே தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நடிகை ஷகிலா தனது தோழி நர்மதாவுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து வழக்கறிஞர் சவுந்தர்யாவுடன் நர்மதா சென்றுள்ளார்.

நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் சீத்தலை செல்போனில் அழைத்து சமாதானப்படுத்தி வைப்பதாக வழக்கறிஞர் சவுந்தர்யா அழைத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது நடிகை ஷகிலா, வழக்கறிஞர் சவுந்தர்யா மீது அவரது வளர்ப்பு மகள் சீத்தல், சீத்தலின் தாய் சசி (வயது 45), சகோதரி ஜமீலா (வயது 22) ஆகியோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த வழக்கறிஞர் சவுந்தர்யா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சமாதானப்படுத்த சென்ற ஷகிலாவின் வழக்கறிஞர் சௌந்தர்யா மீது தாக்குதல் என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story

வெளியானது சகிலாவின் புது படம்! 

Published on 22/07/2020 | Edited on 22/07/2020

 

shakila


மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் காமெடி கதாபாத்திரங்கள் மற்றும் பி கிரேட் படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை சகிலா. தற்போது இவர் தயாரிப்பில் அடல்ட் காமெடி படம் ஒன்று தனி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

'லேடிஸ் நாட் அலவுட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஒருவர் பார்க்க ரூ.50 செலுத்த வேண்டும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சாய் ராம் தசரி என்பவர் இயக்கியுள்ள இப்படம் கடந்த வருடமே வெளியாக வேண்டியது. ஆனால், இப்படத்தைப் பார்த்த தணிக்கை குழு இப்படத்திற்கு எந்த மதிப்பும் தரவில்லை. இதனால் டெல்லியிலுள்ள தணிக்கை தீர்ப்பாயம் வரை இயக்குனர் சென்று இதற்குச் சான்றிதழ் வாங்க போராடிக் கொண்டிருந்தார். கரோனா அச்சுறுத்தலால் 100 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால், இந்தப் படத்திற்காக தனி இணையத்தளத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

 

தெலுங்கில் இதுபோல வெளியிடப்படும் முதல் படம் இதுவாகும். மேலும், இந்தப் படத்தைக் கண்டிப்பாக பெண்கள் பார்க்க வேண்டாம் என்று சகிலா வேண்டுகோள் வைத்துள்ளார். கடந்த ஜூலை 20ஆம் தேதி இப்படம் ரிலீஸாகியுள்ளது.