'ஜப் ஹாரிமெட் செஜால்' படத்தை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் தற்போது 'ஜீரோ' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் ஆகியோரும் நடிக்கின்றனர். சமீபத்தில் கமலுடன் நடந்த சந்திப்பில் ஹேராம் படத்தின் உரிமையை வாங்கிய ஷாருக்கான், அப்படத்தை இந்தியில் ‘ரீமேக்’ செய்து அவர் நடிக்கபோவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஜீரோ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தீவிரமாக நடித்து கொண்டிருக்கிறார் நடிகர் ஷாருக்கான். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் இரவு நேரத்திலேயே நடைபெறுவதால் 7 மணிக்கு ஆரம்பிக்கும் படப்பிடிப்பு மறுநாள் அதிகாலை 6 மணிக்கு முடிவடைகிறது. இந்த இரவு நேர படப்பிடிப்பிற்கு ஷாருக்கான் தினமும் ஹெலிகாப்டரில் சென்று வருகிறார். மேலும் அதற்கு காரணம் சொன்ன ஷாருக்கான், மும்பை நகர போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவே இப்படி ஹெலிகாப்டரில் படப்பிடிப்பிற்கு செல்வதாக தெரிவித்தார்.
ஹெலிகாப்டரில் படப்பிடிப்பிற்கு செல்லும் ஷாருக்கான்!
சார்ந்த செய்திகள்
Next Story
''அவர்களிடம் என் இதயம் செல்கிறது'' - ஷாருக்கான் இரங்கல்
'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 8.15 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, ஓடுதளத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீர் விபத்துக்குள்ளானது. இந்த கோரவிபத்திற்குள்ளான விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்தது. இந்த விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட சுமார் 180 பயணிகளும், விமான ஊழியர்களும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் பயணித்துள்ளனர். இதுவரை ஒரு குழந்தை உள்பட 18 பேர் உயிரிழந்திருப்பதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்...
"ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்களிடம் என் இதயம் செல்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த துயரமடைந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். எண்ணங்களும் பிரார்த்தனைகளும்.." என கூறியுள்ளார்.
Next Story
''எங்கள் முயற்சியில் இனி நீங்களும் பங்காற்றலாம்'' - ஷாருக்கான் அறிவிப்பு!
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனிடையே பலரும் மக்களுக்கு தங்களால் முடிந்த அளவுக்கு உதவி வருகின்றனர். அதேபோல் பல நடிகர்கள் தங்களின் அறக்கட்டளை வாயிலாக மக்களுக்கு நிவாரண பொருட்களை அளித்து வரும் நிலையில், பாலிவுட் நடிகர் தன் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை மூலம் கோடிக்கணக்கான பணத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும் மும்பையில் இருக்கும் தனது அலுவலகக் கட்டிடத்தை, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி தங்க வைக்க மாநகராட்சியிடம் ஒப்படைத்துள்ள அவர் கரோனா தொற்றுக்கு எதிராக போராடுபவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பது குறித்து சமூகவலைத்தளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில்...
"கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் துணிச்சலான சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும், மருத்துவ அணிகளுக்கும் ஆதரவு தெரிவிப்போம். அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க நிதி தருவோம். நானும், மீர் அறக்கட்டளையும் இணைந்து, நமது மருத்துவப் போராளிகளை பாதுகாக்க உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் முயற்சியில் இனி நீங்களும் பங்காற்றலாம். நாங்கள் திரட்டும் நிதிக்கு பங்களியுங்கள். தனிப்பட்ட பாதுகாப்பு கவசம், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றை அவர்களுக்கு எடுத்துச் செல்ல உதவுங்கள்" என கூறியுள்ளார்.
Let’s support the brave health officials and medical teams that are leading the fight against the coronavirus by contributing towards supplies and personal protective equipment (PPE). A little help can go a long way. @MeerFoundationhttps://t.co/zfUWD5GnrD https://t.co/qMG39nau8B
— Shah Rukh Khan (@iamsrk) May 14, 2020