Skip to main content

"குரலற்றவர்களுக்கு எனது குரலைப் பயன்படுத்த விரும்பினேன்" - விவாகரத்தைக் கொண்டாடிய நடிகை பதிவு

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

serial actress shalini celebrates his divorced

 

தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலினி. இவருக்கு திருமணமாகி ஒரு சில மாதங்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை விவாகரத்து செய்தார். பின்பு ரியாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாலினியை போல் ரியாஸும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் எனச் சொல்லப்படுகிறது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

 

பின்னர் ரியாஸ் தன்னை அடித்து துன்புறுத்தியதாக ஷாலினி குற்றம் சாட்டியிருந்தார். மேலும் பல பெண்களுடன் ரியாஸுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி விவாகரத்துக்கு மனுத் தாக்கல் செய்தார். இதில் ஷாலினிக்கு விவாகரத்து அளித்தது நீதிமன்றம். இதனை சந்தோஷமாக ஃபோட்டோ ஷூட் நடத்தி மகிழ்ந்துள்ளார் நடிகை ஷாலினி. அதில் தனது கணவர் புகைப்படத்தை கிழிப்பது போல இருந்தது. மற்றொரு புகைப்படத்தில் எனக்கு 99 பிரச்சனைகள் இருக்கிறது ஆனால் கணவர் இல்லை என எழுதிய பலகை ஒன்றை ஒரு கையில் பிடித்தும் மறு கையில் பீர் பாட்டில் ஒன்றை பிடித்தபடி போஸ் கொடுத்திருந்தார். அதனை அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர, அந்த புகைப்படங்கள் வைரலாகப் பரவியது.

 

இந்த நிலையில் அந்த ஃபோட்டோ ஷூட் குறித்து தற்போது நடிகை ஷாலினி விளக்கமளித்துள்ளார். அந்தப் பதிவில், "இந்த புகைப்படங்கள் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டவை அல்ல; மாறாக இதேபோன்ற சூழ்நிலையில் இருக்கும் மற்ற பெண்களுக்கு செய்தி அனுப்புவதற்காக எடுக்கப்பட்டது. குரலற்றதாக உணரக்கூடியவர்களுக்கு அதிகாரம் அளிக்க எனது குரலைப் பயன்படுத்த விரும்பினேன். எனது செயல்களை சிலர் விமர்சித்திருந்தாலும், சிலர் நான் எதிர்கொண்ட போராட்டங்களையும் சவால்களையும் முழுமையாகப் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். எனது கதையைப் பகிர்வதன் மூலம் இதுபோன்ற சூழ்நிலைகளை அனுபவிக்கும் மற்ற பெண்களுக்கு என்னால் உதவ முடியும் என்பது எனது நம்பிக்கை" எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.