Advertisment

ரூ.300 - ரூ.400 கொடுத்து உதவுங்கள்... சின்னத்திரை நடிகர் கோரிக்கை!

rajesh karir

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவிலும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அனைத்து சினிமாதுறையும் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமாவையே தொழிலாக நம்பியிருந்ததினக்கூலிப் பணியாளர்கள் மூன்று மாத முடக்கத்தால் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்துவிட்டனர்.

Advertisment

தற்போது 'பெகுசராய்' என்ற தொடரில் நடித்து வரும் ராஜேஷ் கரீர் என்ற நடிகர் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதில் அவர் நிதியுதவி கேட்டுள்ளார்.

Advertisment

அந்த வீடியோவில், "நான் ராஜேஷ் கரீர். நான் ஒரு நடிகன். எனது நண்பர்கள் என்னை அடையாளம் கண்டுகொள்வார்கள் என நம்புகிறேன். இப்போது நான் வெட்கப்பட்டால் என் வாழ்க்கை கடினமாகிவிடும். நான் உதவி தேவைப்படும் சூழலில் இருக்கிறேன். அதனால் உங்களிடம் கோருகிறேன். என் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. 300-400 ரூபாயை எனக்குத் தந்து உதவுங்கள் என தாழ்மையாக வேண்டுகோள் வைக்கிறேன். உங்களால் இவ்வளவு உதவி செய்ய முடிந்தால் போதும்.

படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது எனக்குத் தெரியாது. எனக்கு வேலை கிடைக்குமா என்று தெரியாது. என் வாழ்க்கை ஸ்தம்பித்திருக்கிறது. எனக்கு எதுவும் புரியவில்லை. நான் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று ராஜேஷ் கூறியுள்ளார்.

lockdown
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe