Skip to main content

"அஜித் சார் வரச் சொன்னாரா, இல்லை நீயா கேட்டியா அப்பா?" - மூத்த நடிகர் பகிர்ந்த சுவையான சம்பவம்    

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

சென்ற வாரம் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மூத்த நடிகர் டெல்லி கணேஷ், அங்கிருந்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தனது சினிமா அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். 'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பில் அஜித்துடன் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை அந்த மேடையில் அவர் கூறினார். 
 

ennul aayiram

 

நடிகர் டெல்லி கணேஷ் பேசியது... 
 

“அஜித் படப்பிடிப்பு இடைவேளையின் போது வந்து பேசுவார். நாங்கள் நிறைய பகிர்ந்து கொள்வோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும்போது நான் சொன்னேன்... "என் பையனை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுத்தேன். மூன்று கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. அந்த படம் நல்லா இல்லை என்று யாராவது சொல்லியிருந்தால் கூட கவலைப்பட்டிருக்கமாட்டேன். ஆனால், அந்தப் படத்தை டிஸ்டிரிபியூட்டர்ஸ் மக்களிடம் கொண்டு சேர்க்கவேயில்லை. அதுதான் எனக்கு வருத்தம்" என்றேன். "உங்க பையன் நடிக்கிறாரா?" என்று கேட்டார். "இப்போ நீங்க ஒரு நிமிடம் ஃபீரியா இருக்கீங்களா?"னு கேட்டு அந்தப் படத்தோட ட்ரைலர் போட்டுக்காட்டினேன். அதை பார்த்துவிட்டு, "கூல்... உங்கள் பையன் நல்லா இருக்கிறார், நல்லாதான் நடிச்சிருக்கார். அவரை நான் பாக்கணுமே" என்றார். இதை என் மகனிடம் கால் செய்து சொன்னேன். அவன் என்னிடம், "அப்பா... என்னை வரச்சொல்லி அவரா சொன்னாரா, இல்லை நீயா கேட்டியாப்பா?" என்றான். "அவர்தான்டா கூப்பிட்டார், கிளம்பி வா" என்றேன்.

பின்னர், ரெண்டு, மூன்று நாட்கள் என் பையனும் படபிடிப்பில் அஜித் சாருடன் இருந்தான். அப்போது அவர் நிறைய மோட்டிவேஷன் செய்தார். என்னுடைய டிரைவர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் என்பதை சொன்னேன். அஜித்தே, அவரை அழைத்து 'நாம ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா?' என்று கேட்டார். அஜித் கூட ஃபோட்டோ எடுத்த சந்தோஷத்தில் என் டிரைவர், 'சார் எனக்கு ஒரு மாச சம்பளமே வேணாம் சார், இந்த ஒரு ஃபோட்டோ போதும்' என்றான். இப்படி, அனைவரையும் மதிக்கும், அக்கறை காட்டும் பண்பு உள்ளவர் அஜித். என் பையனை சந்தித்த பிறகு என்னிடம் 'கண்டிப்பா இவர் நல்லா வருவார். அதுக்கு நாம் ஏதாவது செய்யலாம்' என்றார். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்திருக்கிறேன். எனக்காக இந்த வார்த்தை சொல்ல வேறெந்த நடிகரும் இல்லை"
 

இவ்வாறு நெகிழ்ச்சியுடன் நடிகர் டெல்லிகணேஷ் பேச, மாணவர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘விடாமுயற்சி’யில் இறங்கும் அஜித்; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 01/05/2023 | Edited on 01/05/2023

 

Ajith embarks on 'vidamuyarchi'; Official notification released

 

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவான அஜித்குமார் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அவர்களை குஷிப்படுத்தும் விதமாக கடைசியாக 'துணிவு' என்ற வெற்றிப்படத்தை கொடுத்திருந்தார். இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் சில காரணங்களால் அவர் விலகிவிட்டார். 

 

விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் அஜித்தின் 52வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

 

மே 1 அன்று (01.05.2023) மாலை டைட்டிலுடன் 'ஏகே 62' பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கடந்த சில தினங்கள் முன் தகவல் வெளியானது. இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என அஜித் இந்த அறிவிப்பை வெளியிட படக்குழுவிடம் சொன்னதாக திரைவட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னதாகவே வெளியாகியுள்ளது. 

 

அஜித்தின் 62ஆவது படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் பெயர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர் என்பது குறித்தான தகவல்கள் மட்டுமே போஸ்டரில் இடம் பெற்றுள்ளன. பைக் சுற்றுப்பயணம் முடித்து வந்து அஜித்குமார் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.

 

 

 

Next Story

நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Actor Ajith's father passed away

 

துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லைகா தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க இசையமைப்பாளராக அனிருத்தும் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா உள்ளிட்டோர் பணியாற்றவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

அண்மையில் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு  அஜித் குமார் துவங்க இருக்கும் 2 ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது” எனக்கூறி இருந்தார். 

 

கடந்த டிசம்பர் மாதம் உலகச் சுற்றுப் பயணத்தின் முதல் சுற்றை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயணம் செய்து முடித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த சுற்றுப் பயணம் 7 கண்டங்கள், 60 நாடுகள் என மொத்தம் 18 மாதங்கள் ஆகும் எனவும் இது அஜித்தின் நீண்ட நாள் கனவு எனவும் தகவல்கள் வெளியானது நினைவுகூறத்தக்கது. 

 

இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியன் காலமானார். அவருக்கு வயது 84. கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். சென்னை பெசண்ட் நகர் மயானத்தில் இன்று காலை 10 மணிக்கு உடல் தகனம் செய்யப்பட உள்ளது.