Advertisment

யார் அந்த ரகு, செந்தில்?... செல்வராகவன் அடுத்த படம் குறித்து ட்வீட்...

கடந்த வருடம் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. செல்வராகவனின் ரசிகர்களின் பல வருட காத்திருப்பிற்கு பின்னர் வந்த படம் என்பதால் இந்த படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்திற்கு முன்பாக செல்வராகவன் எடுத்த மன்னவன் வந்தானடி, நெஞ்சம் மறப்பதில்லை படம் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ரிலீஸாகாமல் உள்ளது. இதில் நெஞ்சம் மறப்பதில்லை படம் விரைவில் வெளியாகலாம் அதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.

Advertisment

selvaraghavan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் செல்வராகவன் தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளை எப்போதோ தொடங்கிவிட்டார். கலைப்புலி. எஸ். தாணு தயாரிப்பில் தனுஷை வைத்து அடுத்த படத்தை எடுக்க போகிறார் என்றெல்லாம் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தற்போது ட்விட்டரில் அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலையின் இறுதி கட்டத்தில் இருப்பதாக ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தெரிவித்துள்ளார் செல்வராகவன். அந்த ஸ்கிரிப்டில் ரகு, செந்தில் என்று இரண்டு கதாபாத்திரங்களின் பெயர் தெரிகிறது. அதை குறிப்பிட்டு இது என்ன படமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

NGK selvaraghavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe