"ஷூட்டிங்ல அவங்க குழந்தை மாதிரி..." - நாயகி குறித்து செல்வராகவன்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிற மே 31ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் என்.ஜி.கே. இப்படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பல ஆண்டுகள் கழித்து செல்வராகவனும், யுவனும் இந்தப் படத்தில் இணைந்து பணிபுரிய, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஃபிப்ரவரி மாதம் இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல தண்டல்காரன் என்றொரு பாடலும் வெளியானது.இதனை அடுத்து இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி எப்போது வைப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், நேற்று இந்த நிகழ்ச்சியை நடத்தியது படக்குழு. நேற்று இரவு 7:30 மணிக்கு யூ-ட்யூபில் வெளியான ட்ரைலர் வெளியானது.

selvaraghavan

இந்த நிகழ்ச்சியில் ரகுல் ப்ரீத் சிங் தவிர மற்ற படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது இயக்குனர் செல்வராகவன் பேசுகையில்,

“என்.ஜி.கே போன்ற சிக்கலான கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்று தயாரிப்பாளர் கேள்வி எழுப்பியபோது அதற்கு சூர்யாதான் சரியானவராக இருப்பார் என முடிவு செய்து தயாரிப்பாளரிடம் தெரிவித்தேன். சூர்யா ஒரு அற்புதமான நடிகர். சின்ன சின்ன பாவனைகளுக்காக கூட மிகவும் மெனக்கெடுவார்.

alt="devarattam" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="8ae87334-4418-41fa-8961-02bf6245f1b1" height="207" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336-x-150-devarattam_10.jpg" width="463" />

நானே ஷாட் ஓக்கே என்று சொல்லிவிட்டால் கூட வேறு வேறு விதமாக செய்து காட்டுவார். ஒரு ஃபேன்பாயாக தான் இந்த படத்தை இயக்கினேன். சாய்பல்லவி ஒரு குழந்தை போன்றவர். ஆனால், சிறந்த நடிகை. அதனால்தான் இந்த படத்தில் அவருக்கும் நடனமாட வாய்ப்பு தராமல் நடிப்புக்கு முக்கியவத்துவம் கொடுக்கப்பட்டது. அதேபோல ரஜூல் ப்ரீத் சிங் ஒரு சிறந்த நடிகர். சொல்வதை உடனடியாக புரிந்துகொண்டு நடித்து காட்டுவார்.

இது போன்ற ஒரு நல்ல டீமுடன் வேலை செய்ததை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன். வருகின்ற மே 31ஆம் தேதி அன்று இப்படம் வெளியாகவுள்ளது. என்.ஜி.கே அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று செல்வராகவன் வழக்கம்போல சிம்பிளாக பேசினார்.

NGK sai pallavi selvaraghavan Surya
இதையும் படியுங்கள்
Subscribe