dgds

Advertisment

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவான ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்றன. இதையடுத்து இவர்கள் கூட்டணி படத்துக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் செல்வராகவன் அடுத்ததாக இயக்கவுள்ள படங்களில் மீண்டும் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளார்.

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், செல்வராகவனின் 12வது படமாக உருவாகும் படத்திற்கு 'நானே வருவேன்' பெயரிடப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் 'ஆயிரத்தில் ஒருவன் 2' படமும் உருவாகவுள்ளது. இப்படம் வரும் 2024ஆம் ஆண்டு வெளிவரும் என புத்தாண்டு அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களுக்கு நடுவே 'புதுப்பேட்டை 2' படத்தையும் இயக்கவுள்ளதாக செல்வராகவன் அறிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது, 'நானே வருவேன்' படத்தை இந்த ஆண்டே முடித்து ரிலீஸ் செய்துவிட்டு, 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்திற்கு முன்பாக இருக்கும் இடைவெளியில் 'புதுப்பேட்டை 2' படத்தையும் முடித்து ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.