Skip to main content

தூய தமிழில் பாடும் சீதகாதி... வெளியானது மக்கள் செல்வன் படத்தின் 2வது சிங்கிள்....

Published on 30/11/2018 | Edited on 30/11/2018
makkal selvan


மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 25வது படம்  ‘சீதகாதி’, இது டிசம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். 
 

இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக இதுவரை   ‘அய்யா’ என்ற பாடலும், படத்தின் ட்ரைலரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து  ‘அவன்’ என்ற இரண்டாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை மதன் கார்கி எழுத, 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைக்க, ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடியுள்ளார்.  
 

‘அய்யா’ என்னும் பாடலை இயக்குனர் தியாகராஜா குமாரராஜன் தூய தமிழில் எழுதியது போன்று, இந்த 2வது  ‘அவன்’ பாடலும் தூய தமிழில் உள்ளது.  கடந்த சில வருடங்களாக தமிழ் திரைப்படங்களிலுள்ள பாடல்களில் தமிழ் செய்யுள் நடை என்பது அரிதாகிவிட்ட நிலையில், சீதகாதி படத்தில் வெளியான இரண்டு பாடல்களிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் இந்த படத்தில் 75வயதான நாடக கலைஞராக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் என்பதால் நாடக மேடை பின்னணியை மக்களுக்கு எளிதில் உணரவைக்க இது போன்று பாடல்களை அமைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

மேலும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன், இயக்குனர் மஹேந்திரன், பக்ஸ், அர்ச்சனா, ரம்யா நம்பீசன், பார்வதி மற்றும் காயத்திரி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். 
 

 

சார்ந்த செய்திகள்