Skip to main content

தென்மேற்கு பருவக்காற்று எப்படி உருவானது தெரியுமா...? - சீனு ராமசாமி 

Published on 07/09/2019 | Edited on 07/09/2019

சினிமாவில் நடக்கும் கதை திருட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள 'படைப்பாளன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சீனு ராமசாமி கதை திருட்டு குறித்து பேசியபோது....

seenu

 

காரல் மார்க்ஸ் எழுதிய தாய் காவியம். ரஷ்யாவின் பாவலுடையை தாய் பற்றிய கதை. அந்த தாய் ரஷ்யாவின் ஆன்மாவை வெளிப்டுத்துக்கூடிய ஒரு தாய். இதை என் இளமை காலத்தில் படித்தேன். அப்போது ஏன் என் தாயை பற்றி நாம் கதை எழுதக்கூடாது என்ற கேள்வி என்னுள் எழ காரணமாகவும், உந்துசக்தியாகவும் அது இருந்தது. அப்படி உருவானதுதான் 'தென்மேற்கு பருவக்காற்று' படம். ஒரு முறை தேனீ கண்ணன் என்னை தொடர்புகொண்டு என்னிடம் ஒரு கதை இருக்கிறது அதை நீங்கள் படம் எடுக்கறீர்களா என்றார். நான் அவரிடம் இரண்டு விஷயங்கள் செய்துவிட்டு அந்த கதையை என்னிடம் வந்து சொல்லுங்கள் என்றேன். ஒன்று, அதை புத்தகமாக வெளியிட்டுவிட்டு வந்து சொல்லுங்கள் அல்லது, கதையை பதிவு செய்துவிட்டு வந்து சொல்லுங்கள் என்றேன். ஏனென்றால் ஒரு கதை என்பது மனிதனின் நிலம் அல்லது வீடு அல்லது வசந்தகாலம் அல்லது அறிவு. இவற்றை எல்லாவற்றையும் கொண்டுவந்துத் தரக்கூடிய ஒரு கதை திருட்டு என்பது ஒரு அபகரிப்பு தான். 

 

dcs

 

அப்போது எப்படி நாம் வீட்டிற்கு ஒரு பூட்டு போடுகிறோமோ, நாய் வளர்கிறோமோ, சிசிடிவி வைக்கிறோமோ அதுபோல் கதைத்திருட்டில் கவனமாக இருப்பது நம் கடமை. ஆக எழுதிவைக்கிற ஒவ்வொரு கதையும் பதிவு செய்வதில் எந்த தவறும் இல்லை. அதனால் இதில் பல சிக்கல்கள் இருந்தாலும் சிரமம் பார்க்காமல் தயவுசெய்து கதையை பதிவு செய்துவிடுங்கள். ஒரு படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உட்பட பல மொழிகளின் உரிமைகள் நல்ல விலைக்கு போவதற்கான காரணம் படத்தின் எழுத்தாளரான கதையாசிரியருக்கு நல்ல தொகை சம்பளமாக தரப்படுகிறது. அதுபோல் இங்கு தரப்படுவதில்லை. ஒரு முன் உதாரணமாக இருக்க என் வாழ்வில் நடந்த சம்பவத்தை இங்கு குறிப்பிடுகிறேன். 'இடம் பொருள் ஏவல்' என்று ஒரு படமெடுத்தேன். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்ன கதையை வைத்துதான் நான் இப்படத்தை உருவாக்கினேன். இந்த படத்திற்காக நான் எஸ்.ராவை முதன்முதலாக தயாரிப்பாளரிடம் அழைத்து சென்று 10 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக்கொடுத்தேன். அந்த படத்திலேயே முழு சம்பளம் வாங்கிய ஒரே மனிதர் எஸ்.ராமகிருஷ்ணன் தான். இதுதான் ஒரு எழுத்தாளனுக்கு தரக்கூடிய கௌரவம். இதை இங்கு நாம் பின்பற்றவேண்டும்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தேரு போல அசஞ்சு வந்தவளே...’ - குத்தாட்டம் போடும் ஜி.வி. பிரகாஷ்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Idimuzhakkam first single released

ஜி.வி. பிரகாஷ் நடிகராக இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் என ஏகப்பட்ட படங்களில் பணியாற்றுகிறார். 

இதில் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் உருவாகி வருகிறது. கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்தில் காயத்ரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் கடந்த மாதம் நடந்த பூனே சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலாக  ‘அடி தேனி சந்தையில்...’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இப்பாடலைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வரதன் எழுதியுள்ள இப்பாடலை அந்தோனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர். திருவிழாவில் நடக்கும் குத்து பாடலாக இப்பாடல் அமைந்துள்ள நிலையில், பாடலுக்கேற்ற குத்தாட்டம் போட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

Next Story

நடிகர் அவதாரமெடுக்கும் இயக்குநர் சீனுராமசாமி; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

 Director Seenuramasamy, who plays the actor; first Look Poster Release

 

தமிழ் சினிமாவில் கூடல்நகர் திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் சீனுராமசாமி. தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் போன்ற படங்கள் இயக்கியதன் மூலமாக அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்த்தவர். இவருடைய இடம் பொருள் ஏவல், இடி முழக்கம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

 

இவரது இயக்கத்தில் வெளியான தர்மதுரை திரைப்படத்தில் நூலகராக ஒரு காட்சியில் மட்டும் இடம்பெறுவார். தற்போது புதுமுக இயக்குநர் விஜய் கார்த்திக் இயக்கும் "ஈகுவாலிட்டி” என்ற திரைப்படத்தில் முழுவதுமாக நடித்திருக்கிறார். இது குறித்து இயக்குநர் சீனுராமசாமி தன்னுடைய வலைதள பக்கத்தில் “குறை நிறைகளோடு என் படைப்புகளை ஆதரித்து அங்கீகரித்த தமிழ் சமூகம் எனை நடிகனாகவும் ஏற்று கொள்ளும் என்ற நம்பிக்கையில் நான் நடித்த திரைப்படத்தின் முதல் பார்வையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்” என்று போஸ்டரை வெளியிட்டுள்ளார்.