Skip to main content

'இளையராஜா போட்ட பாடலால் இரண்டரை வருஷம் படம் பண்ணல' - சீனு ராமசாமி

Published on 19/04/2022 | Edited on 21/04/2022

 

seenu ramaswamy talk about ilayaraaja

 

சீனு ராமசாமி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். முதல் முறையாக இளையராஜாவும் - யுவன் ஷங்கர் ராஜாவும்  இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில் மே 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் சேதுபதி, யுவன் சங்கர் ராஜா, சீனு ராமசாமி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். 

 


இந்த நிகழ்வில் சீனு ராமசாமி பேசுகையில், "18 வருடத்திற்கு முன்பு நானும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு உருவானது. ஒரு அதிகாலையில் ரமண மகரிஷி புகைப்படத்திற்கு முன்னாடி கம்போசிங்கிற்கு உக்காந்தோம். நான் கதை சொல்லி முடித்தவுடன் ஹார்மோனியத்தில் கை வைத்து பாட ஆரம்பித்தார். 'அகதியாய் நிற்கதியாய் பிறந்த மண்ணிலே...' என்று பாடினார், இரண்டு அரை வருஷம் படமே இல்லாம போச்சு. மறுபடியும் இரண்டு அரை வருஷம் கழிச்சு அவரை போய் பார்த்தேன். என்னை பார்த்தவுடனே சொன்னாரு 'நான் உனக்கு அந்த பல்லவிய போட்ருக்க கூடாது யா' என்று. அதன் பிறகு பாடல் வரிகள் எல்லாம் எப்படி இருக்கும் என்பதுல ரொம்ப ஆர்வமா இருந்தேன். இந்த படத்திற்கு பாடல் வாங்குவதற்கு எனக்கு போதிய நேரம் இல்லை. அதனால் படத்தை முழுமையாக எடுத்துவிட்டோம். படத்தை பார்த்தார் என்று சொன்னால் முழு படத்திற்கும் மியூசிக் போட்டுவிடுவார்.

 

அதாவது பாடல்கள் எழுதப்படுவதற்கு முன்பாகவே படமாக்கப்பட்டுவிட்டது.  பாடலுக்கு வரிகள் என்ன என்பதில் எனக்கு ஒரு ஆசை. பா.விஜய்யின் வரிகள் என்னிடம் வந்தன. வாங்கி படித்தேன் 'நினைத்தது ஒன்னு நடந்தது ஒன்னு ஏ ராசா...' என்று இருந்தது. பிறகு மூணே நாளுல கரோனா வந்துடுச்சு. 15 நாளுல லாக் டவுன் போட்டான். டப்பு டப்பு-னு பரவ ஆரம்பிச்சிடுச்சு மேல இருக்கவன் சாக ஆரம்பிச்சுட்டான், கீழ இருக்கிறவன் செத்துட்டான். பயமாயிருச்சு, மரண பயமாயிருச்சு மாமனிதன் படம் மறந்து போயிருச்சு. இரண்டு வருஷம் கடந்திருச்சு. பிறகு கவிஞருக்கு போன் போட்டன், எழுதுறது எழுதிறீங்க சரணத்தோடு எழுத வேண்டியதானே. 'நினைத்தது கிடைச்சிது , இருக்கிறத வச்சி சந்தோசமா இரு' இப்டினு பாசிட்டிவா ஏதாவது எழுத வேண்டியதுதானே. 'நினைத்தது ஒன்னு நடந்தது ஒன்னு ஏ ராசா...' உலகத்துல இந்த இரண்டு வார்த்தையை சந்திக்காத மனிதரே கிடையாது. இந்த பாட்டுக்கு தேசிய விருது கிடைக்கும் என அவரிடம் கூறினேன்" என்று பேசினார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கனவை நோக்கி ஓடும் ‘ஸ்டார்’ கவின்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
kavin star movie trailer released

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' படத்தில் நடித்துள்ளார் கவின். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்திலும் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் 4 பாடல்கள் முன்னரே அடுத்தடுத்து வெளியான நிலையில் சமீபத்தில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இதையடுத்து இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர், வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ளார்” என இயக்குநர் இளன் அவரது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிகனாக ஆக வேண்டும் என்ற கனவோடு ஓடும் இளைஞன், வாழ்க்கையில் என்னென்ன சிக்கல்களை சந்திக்கிறான், அதை எதிர்கொண்டு எப்படி ஹீரோவாக மாறினான் என்பதை காதல், காமெடி, எமோஷன் என கலந்து விரிவாக விவரிக்கும் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. கவின் பல்வேறு கெட்டப்புகளில் தோன்றுகிறார். இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. 

Next Story

தீயாய் பரவிய தகவல் - முற்றுப்புள்ளி வைத்த யுவன் ஷங்கர் ராஜா

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
yuvan about his instagram account de activate issue

தமிழில் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. இப்போது வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் ராம் - நிவின் பாலி கூட்டணியில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை, வடிவேலு - ஃபகத் ஃபாசில் நடிக்கும் மாரிசன், சூரி - துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகும் கருடன் உள்ளிட்ட சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தொடர்ந்து தனது படங்களின் அப்டேட் மற்றும் அவரது சொந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து வருவார். ஆனால் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடிரென ஆக்டிவாக இல்லை. அவரது பக்கம் டீ ஆக்டிவேட் செய்யப்பட்டதா அல்லது முடக்கப்பட்டதா எனப் பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. மேலும் சமீபத்தில் வெளியான விஜய் பட பாடல் கலவையான விமர்சனம் பெற்றதாகச் சில தகவல்களும் சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. 

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து உலா வந்த தகவலுக்கு தற்போது யுவன் ஷங்கர் ராஜா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “இது ஒரு தொழில்நுட்ப கோளாறு, அதை சரி செய்ய என்னுடைய டீம் முயற்சி செய்து வருகிறது. விரைவில் வருகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.