உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலமும் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் நிலையில் கரோனா கிருமியிடம் இருந்து நாட்டை காக்கும் நல்லோருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 'வாழ்த்துப்பா' பாடல் ஒன்றை இயக்குனர் சீனுராமசாமி எழுதி வெளியிட்டுள்ளார். அந்தப் பாடல் வருமாறு....

Advertisment

fd

''மக்களைக் காக்கும்

Advertisment

மக்களே

வாழ்க என்றும் வாழ்கவே

மக்களைக் காக்கும் மக்களே

வாழ்க என்றும் வாழ்கவே

சுமந்து பெற்றவள்

எங்கள் தாய்

இன்று உயிரைக்

காப்பவள் செவிலித்தாய்

விண்வெளி உடையணிந்தாய்

விரைந்து பணி செய்தாய்

மக்களைக் காக்கும்இவள்

புனிதத் தாய்

வாழ்க என்றும் வாழ்கவே

தன்னையே அர்ப்பணம்

செய்து

மருத்துவம் செய்யும்

மருத்துவரே

நீயும் ஓர் தாய்க்கு

மகனல்லவா

எம் பிள்ளைகள் வணங்கும்

உனையல்லவா..

வாழ்க என்றும் வாழ்கவே

மக்களைக் காக்கும்

மகேசனே

http://onelink.to/nknapp

நெருப்பு வெயிலிலே

பொறுப்பாய் நிற்பவரே

முதலில் அன்பாய் சொன்னவரே

அறிந்து வருபவரை

அதிர விரட்டிக் காத்தவரே

வாழ்க என்றும் வாழ்கவே

மக்களைக் காக்கும் காவலரே

ஊரடங்கில் ஊரை

சுத்தம் செய்தவரே

நீல உடையில்

சாக்கடையைச் சரி செய்தவரே

நீங்கள் தொழிலாளியல்ல

தூய்மைத் தொண்டர்கள்

வாழ்க என்றும் வாழ்கவே

மக்களைக் காக்கும்

பெருந்தெய்வமே

அன்பும் அறமும்

தாழ்ந்து விடாது இனி

கொரோனா கிருமி

வாழ்ந்து விடாது''

என பாடல் எழுதியுள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி.