Skip to main content

பிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி 

Published on 31/07/2018 | Edited on 31/07/2018
vijay sethupathi

 

 

 

கே ப்ரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் பலர் விழாவில் கலந்து கொண்டு  சிறப்பித்தனர். அதில் ஒருவரான இயக்குனர் சீனு ராமசாமி விழாவில் பேசியபோது.... "இடம் பொருள் ஏவல் படத்துக்காக இளைய இசைஞானி யுவன் ஷங்கர் ராஜாவை முதன்முறையாக சந்தித்தேன். அதன் பிறகு 'தர்மதுரை' படத்திலும், அடுத்து 'கண்ணே கலைமானே' படத்திலும் இணைந்து எங்கள் உறவு பலமானது. அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில், நான் இயக்கும் படத்தை யுவன் தான் தயாரிக்க இருக்கிறார்" என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நல்ல வேள நா வடசென்னை படத்துல நடிக்கல' - விஜய்சேதுபதி புலம்பல் 

Published on 22/10/2018 | Edited on 24/10/2018
vijay sethupathi

 

விஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்த '96' படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றுள்ள நிலையில் பா. இரஞ்சித்தின் கூகை திரைப்பட இயக்கம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் '96' படகுழுவினர் பங்கேற்று அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள், உதவி இயக்குனர்கள், எழுத்தாளர்களுடன் கலந்துரையாடினர். அப்போது நடிகர் விஜய்சேதுபதி வாராவாரம் தன் நடிப்பில் படம் வெளிவருவது குறித்தும், ரஞ்சித்துடன் எப்போது இணைந்து பணியாற்றுவீர்கள் என் கேள்விக்கும் பதில் அளித்து பேசியபோது...

"ஏற்கனவே வாராவாரம் என் படம் வெளிவருவதை வைத்து மீம் போட்டு தாளித்து விடுகிறார்கள். நல்ல வேளை நான் 'வடசென்னை' படத்தில் நடிக்கவில்லை. இல்லையென்றால் தொடர்ந்து மூன்று வாரம் என் படமாகத்தான் இருந்திருக்கும். மேலும் அந்த கதாபாத்திரத்தில் அமீர் நன்றாகவே நடித்திருந்தார் ரஞ்சித் எனக்கு நல்ல நண்பர். 'காலா' படம் பார்த்துவிட்டு அன்றே அவரை தொடர்பு கொண்டு பாராட்டினேன். நட்பு வேறு தொழில் வேறு. இருவருக்குமே அதற்கான நேரம் அமைய வேண்டும். அமைந்தால் தான் வேலை செய்ய முடியும். அவருக்கும் தோன்ற வேண்டும். சினிமா உணர்ச்சிகளுக்காக செய்யமுடியாது. நல்ல கதைக்கு தான் செய்யமுடியும். ஜாதி ஒழிப்பு பற்றி ரஞ்சித் பேசுவது பாராட்டுக்குரியது. எனக்கும் வாய்ப்பு கிடைக்கும் தருணங்களில் நானும் ஜாதி ஒழிப்பு பற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்" என்றார்.

 

 

Next Story

கௌதம் கார்த்திக்குக்காக வந்த விஜய் சேதுபதி

Published on 20/10/2018 | Edited on 20/10/2018

 

 

'மிஸ்டர்.சந்திரமௌலி' படத்திற்கு பிறகு கௌதம் கார்த்திக் தற்போது முத்தையா இயக்கத்தில் 'தேவராட்டம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கௌதம் கார்த்திக் நடிக்கும் அடுத்த படத்தை நடிகர் விஜய் சேதுபதி துவங்கி வைத்தார். ஒயிட்லைன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அன்பு தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்குகிறார்.  படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரி நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.