Skip to main content

"குடும்பக் கட்டுப்பாடு திட்டத்துக்கு செய்ததை கரோனா தடுப்பூசிக்கும் செய்யவேண்டும்" - சீனுராமசாமி  

Published on 19/05/2021 | Edited on 19/05/2021
vdxvdxbvdxvd

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாகத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் கரோனா தடுப்பூசி குறித்து இயக்குநர் சீனு ராமசாமி சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்...

 

"குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை எப்படி சன்மானம் தந்து வெற்றிகரமாக அன்றைக்கு நிறைவேற்றினார்களோ அது போல கரோனா தடுப்பூசியிடும் பணியைத் தமிழக அரசு நிறைவேற்றி சகல மக்களும் தடுப்பூசியின் மீது ஆர்வம் கொள்ளச் செய்தல் வேண்டுமெனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்