"அதன்பிறகு தேர்வுகள் எங்களை கண்டு அஞ்சும்" -இயக்குனர் சீனு ராமசாமி  

gvjgjg

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுகள் நேற்று இந்தியா முழுவதும் நடந்து முடிந்தது. இதற்கிடையே இந்த தேர்வுக்காக தயாராகி வந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, மாணவர் ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நீட் தேர்வை எதிர்த்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வரும் நிலையில், இதுகுறித்து இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்...

"கற்கும் வாய்ப்பில்

கல்வியில் சமமில்லை எனவே இங்கே கேள்வித்தாள்கள் கேள்விக்குறியாகிறது

சமமான கல்வி போதித்தல்

தர்மமாகும்

கல்வி தேர்தல் போல்

சமமாகட்டும் அதன் பிறகு

தேர்வுகள் எங்களை கண்டு அஞ்சும்

"அகரம்" சூர்யா

என்பேன் உம்மை

இப்பெயரை மறக்காது

கல்வியின்

வரலாறு" என கூறியுள்ளார்.

actor surya seenu ramasamy
இதையும் படியுங்கள்
Subscribe