Skip to main content

''என்னை அவர்களுக்கு பேட்டி தரச்சொல்லி தொல்லை கொடுக்கின்றனர்'' - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் காட்டம்!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

fga

 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
 


இந்நிலையில் மாரி 2, பா பாண்டி, மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தன்னை ஒரு ஊடகம் பேட்டி தரச்சொல்லி தொல்லை கொடுப்பதாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்.. ''என்னை வேண்டுமென்றே வாரிக்கொண்டே இருக்கும் ஒரு ஊடகம், என்னை அவர்களுக்கு பேட்டி தரச்சொல்லி தொல்லை கொடுக்கின்றனர். இதுதான் அக்மாரக் எச்சைத்தனம். பேட்டி கொடக்கவில்லையென்றால் எதிர் பிரச்சாரம் செய்யும் புதிய டிரெண்ட் ''மீடியா டெரரிசம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"வாய் கிழிய பேசுவார், அவரும் இன்று விலை போகிவிட்டார்" - கம்யூனிச இயக்குநரை சாடிய ஷான் ரோல்டன்

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Sean Roldan tweet about his friend and director

 

தமிழில் 'வாயை மூடி பேசவும்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஷான் ரோல்டன் தொடர்ந்து 'முண்டாசுப்பட்டி', 'ப.பாண்டி', 'மெஹந்தி சர்க்கஸ்' உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானார். கடைசியாக ஞானவேல் இயக்கத்தில் வெளியான 'ஜெய் பீம்' படத்தில் இசையமைத்திருந்தார். 

 

இந்நிலையில் ஷான் ரோல்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "என் நண்பர் இயக்குநர் ஒருவர் கம்யூனிச சித்தாந்தத்தை தன் உயிர்மூச்சாய் கொண்டவர். எங்கள் பிணைப்பையும், கலை சார்ந்த கெமிஸ்ட்ரியையும் இந்த திரையுலகம் நன்கு அறியும். ஆனால், அவரும் இன்று வியாபார கோட்பாட்டுக்கு விலை போனது வருத்தத்தை அளிக்கிறது. சித்தாந்தங்களை இங்கு வாய் கிழிய பேசுவார்கள். ஆனால், நடைமுறையில் இவையெல்லாம் நம் தமிழ்நாட்டில் போணியாவதில்லை என்பதே நிதர்சனம். இனி, சித்தாந்தம் என்ற பெயரில் வாய் சவடால் விடுபவர்களை புறக்கணியுங்கள். மார்க்கெட் தான் நம் கடவுள்" என குறிப்பிட்டுள்ளார்.  

 

இவரது பதிவு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ராஜு முருகன் மற்றும் ஞானவேல் ஆகியோர் தொடர்ச்சியாக கம்யூனிச சித்தாந்தம் குறித்து பேசுபவர்களாக அறியப்படுகிறார்கள். இருவருடனும் ஷான் ரோல்டன் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

மூன்று லட்சம் பார்வைகளைக் கடந்து கவனம் ஈர்க்கும் 'பறை' தனியிசைப் பாடல் 

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

Parai

 

குமரன் இயக்கத்தில் பிரபல இசையமைப்பாளரான ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ளது 'பறை' தனி இசைப்பாடல். பறை இசைக்கலைஞரின் சடலத்தை ஊருக்குள் எடுத்துவர நிலவும் எதிர்ப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கான வரிகளை கே.லோகன் மற்றும் ஷான் ரோல்டன் எழுதியுள்ளனர். இப்பாடலை இயக்கியுள்ள குமரன், கதிர் நடிப்பில் வெளியான ஜாடா படத்தை இயக்கியவர் ஆவார். நேற்று நடைபெற்ற இப்பாடல் வெளியீட்டு விழாவில், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இயக்குநர் குமரன், தா.செ.ஞானவேல், நடிகர் ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

 

ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனம்பெற்ற இப்பாடல் யூடியூப் தளத்தில் ஒரே நாளில் மூன்று லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் இப்பாடல் குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.