கலைமாமணி விருது வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த சசிக்குமார் 

sasikumar

கடந்த 2011 ஆண்டு முதல் 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது 201 மேற்பட்டவர்களுக்கு தமிழக அரசு வழங்கி சிறப்பித்துள்ளது. இதில் நடிகர், இயக்குனரான சசிகுமாருக்கும் தமிழக அரசு கலைமாமணி விருதினை வழங்கியுள்ளது.பொள்ளாச்சியில் தன் படப்பிடிப்பில் இருந்த சசிகுமார் விருது வழங்கிய தமிழக அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பரிந்துரையின்படி, இயல் இசை, நாடகம், கிராமியம், திரைத்துறை மற்றும் சின்னத்திரை போன்ற கலைப்பிரிவுகளின் கீழ் கலைமாமணி விருதுபெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Sasikumar
இதையும் படியுங்கள்
Subscribe