Skip to main content

பிரபல இயக்குநரை இயக்கும் சசிகுமார்

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

sasikumar to direct anurag kashyap

 

2008-ஆம் ஆண்டு வெளியான 'சுப்ரமணியபுரம்' படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் திரையுலகிற்கு அறிமுகமானார் சசிகுமார். இப்படத்தில் ஜெய், சுவாதி, கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசை பணிகளை மேற்கொண்டிருந்தார். மதுரையில் 80-களில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கேங்ஸ்டர் படங்களின் லிஸ்டில் இருக்கிறது. 

 

இதையடுத்து 2010 ஆம் ஆண்டு தனது இரண்டாவது படமாக 'ஈசன்' படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் சமுத்திரக்கனி, வைபவ், அபிநயா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரிவெஞ்ச் ட்ராமா என்ற ஜானரில் அமைந்திருந்த படம் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தையும் சசிகுமாரே தயாரிக்க ஜேம்ஸ் வசந்தன் இசையை கவனித்தார். 

 

இதனிடையே 2009ல் நாடோடிகள் படத்தில் நடித்திருந்த சசிகுமார், 'ஈசன்' படத்திற்கு பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை. தொடர்ச்சியாக நடிகராக மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். பின்பு பாரதிராஜாவின் கனவு படமான குற்றப்பரம்பரை கதையை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. 

 

சில மாதங்களுக்கு முன்பாக மீண்டும் படங்களை இயக்கவுள்ளதாக தெரிவித்தார் சசிகுமார். மேலும் படம் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், சசிகுமார் இயக்கவுள்ள புது படம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப்பை சசிகுமார் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் வரலாற்று பின்னணியில் உருவாவதாகவும் முதற்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் வருகிற ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்கிய 'கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படம் எடுக்க சசிகுமாரின் 'சுப்ரமணிபுரம்' படமும் ஒரு காரணம் என ஒரு பேட்டியில் கூறியிருப்பார். மேலும் அப்படத்தின் டைட்டில் கார்டில் சசிகுமாருக்கு நன்றி தெரிவித்திருப்பார். தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். பின்பு சுந்தர்.சி நடிப்பில் உருவாகும் 'ஒன் டூ ஒன்' படத்தில் நடிக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Next Story

“1 மணி நேரத்திற்கு 5 லட்சம்” - கண்டிஷன் போட்ட இயக்குநர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Anurag Kashyap fixed a rate for his meeting

பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். தமிழில் விஜய் சேதுபதியின் இமைக்கா நொடிகள் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த லியோ படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். இப்போது விஜய் சேதுபதியின் மகராஜா, சுந்தர்.சி-யின் ஒன் டூ ஒன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து ஜி.வி பிரகாஷை வைத்து தமிழ் மற்றும் இந்தியில் ஒரு படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், தன்னிடம் சந்திப்பு மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கவுள்ளதாக அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “எனக்கு  மெசேஜோ அல்லது ஃபோனிலோ யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம். என்னுடன் சந்திப்பு மேற்கொள்ள பணம் செலுத்துங்கள் உங்களுக்கான நேரம் கிடைக்கும்” என பதிவிட்டுள்ளார். மேலும், “நான் புதிய நபர்களுக்கு உதவி செய்து நிறைய நேரத்தை வீணடித்திருக்கிறேன். தான் மேதாவி என நினைத்து கொண்டிருக்கும் நபர்களைச் சந்தித்து இனிமேல் எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. 

எனவே நான் இப்போது சந்திப்பு மேற்கொள்ள பணம் வாங்குகிறேன். 10-15 நிமிடத்திற்கு 1 லட்சமும் அரை மணி நேரத்திற்கு 2 லட்சமும், 1 மணி நேரத்திற்கு 5 லட்சமும் வசூலிக்கிறேன். இந்த தொகைக்கு நீங்கள் உடன்பட்டால் என்னை அழைக்கலாம் அல்லது கொஞ்சம் தள்ளியே இருங்கள். ஆனால் பணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.