Skip to main content

‘பொன்னியின் செல்வன்’... யார் இந்த பெரிய பழுவேட்டரையர்?

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

sarthkumar talk about periya periya paluvettaraiyar

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. 

 

அந்தவகையில் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் அவை...

 

"பொன்னியின் செல்வன் புத்தகத்தில் இருப்பதை அப்படியே படமாக்க வேண்டும் என்றால், பத்து பாகமாக எடுக்க வேண்டும், அதனால் மணிரத்னம் நாவலின் கதையின் கரு மாறாமல் அதை ஒட்டியே படத்தை எடுத்துள்ளார். அதில் எனது கதாபாத்திரமான பெரிய பழுவேட்டரையர், போர்க்களத்தில் 64 விழுப்புண்கள் பெற்ற மாவீரன், சோழ நாட்டிற்கு கட்டுப்பட்டவன். சுந்தர சோழனுக்கு நண்பன், நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய மனிதன் தான். ஆனால், அழகுக்கு  மயங்கி, நந்தினியை திருமணம் செய்து கொண்டு, அவளின் எண்ணம் என்னவென்று புரியாமலே அவளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரம்.

 

ஓரு நாள் மணிரத்னம் என்னை அவரது அலுவலகத்துக்கு அழைத்து பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்கிறீங்கன்னு சொன்னதும் பெரிய மகிழ்ச்சி. ஏனென்றால் இந்த கதாபாத்திரம் அப்படிப்பட்டது. இந்த படத்தில் நடித்ததே பெரும் பாக்கியம் என்றுதான் படத்தில் நடித்த எல்லாரும் நினைத்து இருப்பார்கள். ஏன்னா வீரபாண்டிய கட்டபொம்மன் சென்று சொன்னதும் நமக்கு முதலில் நியாபகம்  வருவது சிவாஜி சார்தான். அதேபோல் கர்ணன் என்று சொன்னால் சிவாஜி சார்தான் நினைவுக்கு வருவார். அதைபோல வருங்காலத்தில் இந்த கதையைப் படிப்பவர்கள் எல்லாம், வந்தியத்தேவனாக கார்த்தி, பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், மதுராந்தகனாக ரஹ்மான், பெரிய பழுவேட்டைராயராக நான், சிறிய பழுவேட்டைராயராக பார்த்திபன், குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, என்று அந்த கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டும் வாய்ப்பை பெற்று இருக்கிறோம்.

 

இந்த திரைப்படத்திற்கு பிறகு, சோழர்களின் பெருமை தமிழகத்தை தாண்டி பேசப்படும். அவர்களின் வீரம், அடிப்படை வசதி, கடல்கடந்து வணிகம் செய்வது, கடல் கடந்து போரிட்டு பல்வேறு நாடுகளை வென்று 9 ஆம் நூற்றாண்டில் இருந்து 12 ஆம் நூற்றாண்டு வரை மிகவும் செழிப்பாக ஆட்சி செய்த சோழ அரசர்களை பற்றியும், அவரது சாம்ராஜ்யத்தை பற்றியும் பேசப்படும். வரலாறு படித்தவர்களுக்கு தெரிந்திருந்தாலும், படிக்காதவர்கள் மத்தியில் சோழர்களின் சாம்ராஜ்யத்தை பற்றி இப்படம் தெரியப்படுத்தும். அனைவரும் சோழர்களை பற்றி தெரிந்து கொண்ட பிறகு இந்திய வருகிறவர்கள் தாஜ்மஹாலை எப்படி வியந்து பார்க்கிறார்களோ, அப்படி தஞ்சைக்கு வந்து பெரிய கோவிலையும், கங்கைகொண்ட சோழபுரத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை இந்த படம் தூண்டும், தூண்ட வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றல் தஞ்சை கோவிலை கட்டிய விதம், அனைவரையும் வியப்படைய செய்யும், நாம்  இந்தோனேஷிய அங்கோர்வாட் சென்று பார்க்கும் போது, மனிதனால் இதெல்லாம் கட்டப்பட்டது என்று ஏற்படும் பிரமிப்பு, தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் போது ஏற்படும். உங்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக இந்த படம் பூர்த்தி செய்யும்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூஜையுடன் பணிகளைத் தொடங்கிய சங்க நிர்வாகிகள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nadigar sangam building works start again with pooja

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்த பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

nadigar sangam building works start again with pooja

இந்த நிலையில் இன்று சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் தொடங்கியது. பூஜை நடத்தி பணிகளை தொடங்கினார்கள் சங்க நிர்வாகிகள். இந்த பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story

இரட்டை வேடத்தில் சிம்பு - வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
simbu to act double getup in kamal maniratnam thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்தச் சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதால் தேர்தல் முடிந்த பின்புதான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படத்தின் லேட்டஸ்ட் தகவலின்படி, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் சிம்பு வேறொரு புதிய கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படத்தின் நடிகர்கள் விலகவும் இணையவுமாக தகவல் வெளியாகி வரும் நிலையில் விரைவில் தெளிவான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, கமல் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.