style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் விஜய், வரலட்சுமி சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தற்போது விஜய், வரலட்சுமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் வைத்து கையில் குடையுடன், காதில் கடுக்கனுடன் நிற்கும் விஜய்யின் புகைப்படம் ஒன்றை நடிகை வரலட்சுமி தன் ட்விட்டர் பக்கத்தில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு விரைவில் அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});