அதன்படி அபுதாபியில் பி.ஏ.பி.எஸ். அமைப்பு சார்பில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் சுவாமி நாராயண் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. ரூ.700 கோடி செலவில் அமைக்கபட்டுள்ள இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று 14.02.2024 நடந்த நிலையில் இரண்டு நாள் அரசு பயணமாக அங்கு சென்ற பிரதமர் மோடி அதில் பங்கேற்று திறந்து வைத்தார். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களோடு, சுரேஷ் கோபி, அக்ஷய் குமார், ஷங்கர் மகாதேவன், விவேக் ஓபுராய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், பங்கேற்றார். பின்பு கோயில் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது ஒரு சிறந்த அனுபவம். அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தைக் இந்த கோயில் பிரதிபலிக்கிறது. இதை சாத்தியமாக்கிய ஐக்கிய அரபு எமிரேட் அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எனது பாராட்டுக்கள். இந்த கோயில் நம் கலாச்சாரத்தின் அற்புதமான சான்று. இது அனைத்து மதத்தினருக்கான ஒரு கோயில். இந்தியர்களுக்கும் இது ஒரு சிறந்த சுற்றுலா தளமாக இருக்கும்” என்றார்.