Advertisment

சரத்குமார் சென்ற கேரவன் பேருந்து மீது மோதி விபத்து

sarathkumar caravan accident

Advertisment

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், குடும்பத்துடன் வருகை தந்தார். அவரை அழைத்து வருவதற்காக கேரவனும் வரவழைக்கப்பட்டிருந்தது. இதில் சரத்குமார், அவரது மகள் வரலக்‌ஷ்மி சரத்குமார் உள்ளிட்ட சிலர் பயணித்தனர்.

அவர்கள் கோயிலுக்கு வந்தடந்த பின் அந்த கேரவன் திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, திருப்பத்தூருக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த பேருந்தின் மீது மோதி கேரவன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் வந்த 13 பேர் லேசாக காயமடைந்தனர். கேரவனில் ஒருவருக்கு லேசான காயம் என கூறப்படுகிறது. பின்பு காயமடைந்த அனைவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

sivagangai sarathkumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe