Skip to main content

வெப் சீரிஸில் அடியெடுத்து வைக்கும் முன்னணி நடிகர்!

Published on 15/07/2020 | Edited on 15/07/2020

 

sarathkumar

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமாரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

 

இதனை முன்னிட்டு நேற்று மாலை சமூக ஊடகத்தில் 'Birds of Prey - The Hunt Begins' என்ற வெப்சீரிஸின் போஸ்டர் வெளியாகி வைரலானது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் வெப் சீரிஸில் நடிப்பது இதுவே தொடக்கமாகும்.

 

இந்த அறிவிப்பை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இதன் மூலம் ஓ.டி.டி. தளத்தில் சரத்குமார் அறிமுகமாகவுள்ளது உறுதியாகியுள்ளது. இதை யார் இயக்குகிறார்கள், யாரெல்லாம் சரத்குமாருடன் நடிக்கிறார்கள் உள்ளிட்ட எந்தவொரு தகவலையுமே ராதிகா சரத்குமார் வெளியிடவில்லை.

 

மேலும், இந்த வெப் சீரிஸ் அர்ச்சனா என்பவர் எழுதிய 'Birds of Prey' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்க புகைப்படக் கண்காட்சி நிறைவு விழா (படங்கள்)

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘காலத்தால் கரையாத காட்சிகள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. இக்கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். கண்காட்சி தொடங்கியதில் இருந்து இன்றுவரை ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இக்கண்காட்சிக்கு வருகை தந்து புகைப்படக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்து ரசித்தனர். மேலும், இதழியல் மற்றும் காட்சித்தொடர்பியல் துறையில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு கண்காட்சியில் பத்திரிகை துறை தொடர்பான வகுப்புகளும் நடப்பட்டன. கண்காட்சியின் நிறைவு விழா இன்று (17.02.2023) நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நக்கீரன் ஆசிரியர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களான அருண் ராம், ரஞ்சிதா குணசேகரன், கார்த்திகைசெல்வன் மற்றும் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்க புகைப்படக் கண்காட்சி (படங்கள்)

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘காலத்தால் கரையாத காட்சிகள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாதெமியில் இன்று (10.02.2023) தொடங்கியது. இக்கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் எடுத்த புகைப்படங்களைப் பார்த்து ரசித்து தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் தயாரித்திருந்த புகைப்படத் தொகுப்பு அடங்கிய புத்தகத்தை முதல்வர் வெளியிட, இந்து என்.ராம் பெற்றுக்கொண்டார்.  உடன் இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, எழிலன் எம்.எல்.ஏ மற்றும்  வேலம்மாள் பள்ளி இயக்குநர் வேல்மோகன் ஆகியோர் உடன் இருந்தனர். விழாவில் நக்கீரன் ஆசிரியர், நல்லி குப்புசாமி, ஆ.கே மற்றும் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த புகைப்படக் கலைஞர்கள் தற்போது பணியாற்றும் பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். விழா நிறைவில் மாணவர்கள் கண்காட்சியில் உள்ள பல்வேறு புகைப்படங்களைக் கண்டு ரசித்தனர்.