Skip to main content

தீபாவளிக்கு திரைக்கு வரும் சந்தானம் - 240 நாட்களுக்கு பிறகு புதுப்படம் ரிலீஸ் 

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

biskoth

 

இயக்குனர் ஆர்.கண்ணன் எழுதி, இயக்கி, தயாரிக்கும் 'பிஸ்கோத்' படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாகப் பணியாற்றுபவன், எப்படி உயர் பதவிக்குச் செல்கிறான், என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் 'சௌகார்' ஜானகி, சந்தானத்தின் பாட்டியாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தானத்தின் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடிக்கிறார். இவர், ஏற்கனவே சந்தானத்துடன் 'ஏ1' படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கரோனா பாதிப்பால், தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடியிருந்ததால், படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில், இன்று முதல் திரையரங்குகளை திறக்க, தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது. ஆனால் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையேயான வி.பி.எஃப் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட மோதலால் புதுப் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

          
இந்நிலையில், இந்தப் பிரச்சனைக்கு சமரசம் காணும் வகையில், 'க்யூப்' மற்றும் 'யு.எஃப்.ஓ' போன்ற நிறுவனங்கள், இந்த நவம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படும் புதுப்படங்களுக்கு வி.பி.எஃப் கட்டணம் வசூலிக்காது என்று அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நடப்பு தயாரிப்பாளர் சங்கம், வி.பி.எஃப் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, 2 வாரத்திற்கு மட்டுமே புதிய திரைப்படங்களை வெளியிட முடிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், தீபவாளிக்கு புதுப்படங்கள் வருவதில் இருந்த சிக்கல்கள் தீர்ந்தன. இதனைத் தொடர்ந்து, சந்தானத்தின் 'பிஸ்கோத்' படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

“நான் விஷாலும் இல்ல... சிம்புவும் இல்ல” - தனது ஸ்டைலில் சந்தானம் 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
santhanam movie Inga Naan Thaan Kingu trailer released

சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தைத் தொடர்ந்து தற்போது ஆனந்த் நாராயண் இயக்கத்தில் ஒரு படம் நடித்து முடித்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் வழங்க, சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரிப்பில் இப்படம் உருவாகும் நிலையில் சந்தானத்திற்கு ஜோடியாக அறிமுக நாயகி பிரியாலயா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் தம்பி ராமையாவும், மனோபாலாவும் நடித்துள்ளனர். 

இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்க இமான் இசையமைத்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் அவரது எக்ஸ் தள பக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார். படத்திற்கு 'இங்க நான் தான் கிங்கு' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. கலர்ஃபுல்லாக அந்த போஸ்டர் அமைந்திருந்த நிலையில் வருகிற கோடைக்கு இப்படம் வெளியாகுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 90களில் பிறந்த இளைஞனாக வரும் சந்தானம் திருமணத்திற்குப் பெண் தேடுகிறார். பின்பு திருமணம் முடிந்த பிறகு ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறர். அதிலிருந்து தப்பித்தார இல்லையா? என்பதை காமெடி கலந்து சொல்லியிருப்பது போல் ட்ரைலர் அமைந்திருக்கிறது. மேலும் சந்தானம் “நடிகர் சங்கத்தைக் கட்டி முடிச்சிட்டுத்தான் கல்யாணம் பனண்ணுவேன்னு அடம்பிடிக்க நான் விஷாலும் இல்ல. எப்பவும் சிங்கிளா சுத்திகிட்டு இருக்கிறதுக்கு சிம்புவும் இல்ல” என ட்ரலைர் ஆரம்பத்தில் பேசும் வசனம் வழக்கமான அவரது கிண்டல் கலந்த ஸ்டைலில் இடம்பெறுகிறது. இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Next Story

“பாரதிராஜாவிற்கு வில்லனாக நடித்துள்ளேன்” - ஜி.வி. பிரகாஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
gv prakash speech at kalvan audio launch

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பாரதிராஜா, "இயக்குநர் ஷங்கர் பிடிவாதக்காரன். நிச்சயம் அந்த பிடிவாதம் ஜெயிக்கும். சினிமாவில் அவனுக்குப் பெரிய இடம் காத்திருக்கிறது. இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன். திறமையான நடிகை அவர். ஜி.வி. நல்ல இசையமைப்பாளர், நடிகர் அதைத் தாண்டி நல்ல மனிதர். வேறொரு டைமன்ஷனில் ஜிவியைப் பார்க்கலாம். இவானா சிறப்பாக நடித்துள்ளார். வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குநர் இங்கு இருப்பது சந்தோஷமான விஷயம்" என்றார். 

நடிகர் ஜி.வி. பிரகாஷ், "இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ பாரதிராஜா சார்தான். அவருக்கு நானும் தீனாவும் வில்லனாக நடித்துள்ளோம். இந்தப் படத்தில் அவர் நடிப்புக்காக நிச்சயம் தேசிய விருது வாங்குவார். அவருடன் நாங்கள் இருந்த நேரத்தை பொக்கிஷமாக வைத்திருப்போம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். அவரும் ராஜா சாரும் தமிழ் சினிமாவின் கிராமர் புக், என்சைக்ளோபீடியா. இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அதை நீங்கள் படம் வரும்போது புரிந்து கொள்வீர்கள். இவானா, தீனா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் டில்லி பாபு சார், சக்திவேலன் சாருக்கு நன்றி. ஏப்ரல் 4 ரிலீஸ் தேதியும் சிறப்பாக அமைந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.