Skip to main content

'ஜெய் பீம்' சர்ச்சை... என்ன பேசினார் நடிகர் சந்தானம்?

Published on 17/11/2021 | Edited on 18/11/2021

 

 Santhanam

 

சீனிவாச ராவ் இயக்கத்தில், நடிகர் சந்தானம், ப்ரீத்தி வர்மா, ‘குக் வித் கோமாளி’ புகழ், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சபாபதி’ திரைப்படம் நவம்பர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், ‘சபாபதி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (16.11.2021) இரவு நடைபெற்றது. நடிகர் சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த சந்தானம், ‘ஜெய் பீம்’ திரைப்பட சர்ச்சை குறித்து கூறுகையில், " ‘ஜெய் பீம்’ மட்டுமல்ல எந்தப் படமாக இருந்தாலும் நாம் ஒரு கருத்தைப் பற்றி பேசும்போது அது உயர்ந்தது, சிறந்தது என என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். ஆனால், மற்றவர்களைத் தாழ்த்தி பேசக்கூடாது. மற்றவர்களைக் காயப்படுத்தும் வகையில் ஒருவரை அமுக்கியும் பேசக்கூடாது. எல்லா சாதியினரும் மதத்தினரும் ஒன்றாக அமர்ந்து 2 மணி நேரம் படம் பார்க்க வருகிறார்கள். அதனால் அங்கு இது தேவையில்லாத விஷயம்" என்றார். 

 

 

ad

 

 

சார்ந்த செய்திகள்