Skip to main content

சிகிச்சைக்கு முன் பட வேலைகளை முடிகிறாரா சஞ்சய் தத்?

Published on 16/08/2020 | Edited on 16/08/2020
cs

 

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு 8ஆம் தேதி கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 10ஆம் தேதி அவரது உடல்நலம் சீராகி வீடு திரும்பினார். சஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டி திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்த நிலையில் அவர் தன்னுடைய உடல்நலம் மற்றும் திரைப்பயணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

அதில், "வணக்கம் நண்பர்களே... சில மருத்துவ சிகிச்சைக்காக நான் என் வேலையில் இருந்து ஒரு குறுகிய கால ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கவலைப்படவோ அல்லது தேவையின்றி யூகிக்கவோ வேண்டாம் என்று எனது நலம் விரும்பிகளைக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன், நான் விரைவில் மீண்டும் வருவேன்" எனக் கூறியுள்ளார். அவருடைய உடல்நிலையில் உள்ள பிரச்சனை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும், அதிகாரபூர்வமாக எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை. மருத்துவ காரணங்களுக்காக திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக சமூக வலைதளத்தில் சஞ்சய் தத் அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில் சஞ்சய் தத் நான்காம் கட்ட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலரும் சஞ்சய் தத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே சஞ்சய் தத் சமீபத்தில் நடித்த 'சடக் 2' படத்தில் அவருடைய டப்பிங் வேலைகள் குறித்து தற்போது செய்தி வெளியாகியுள்ளது. அடுத்த வாரத்துக்குள் 'சடக் 2' திரைப்படத்தின் கடைசி கட்ட டப்பிங் வேலைகளை சஞ்சய் முடிப்பார் எனவும், அதன் பின் மருத்துவ ஓய்வில் செல்லவுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மகேஷ் பட் இயக்கி, அவரது மகள்கள் ஆலியா பட், பூஜா பட் நடித்திருக்கும் 'சடக் 2' இதுவரை யூடியூபில் அதிகம் டிஸ்லைக் பெற்றுள்ள ட்ரெய்லர் என்ற சாதனையை படைத்துள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய்யைத் தொடர்ந்து அஜித் - மோதத் தயாராகும் சஞ்சய் தத்

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

sanjay dutt to play villan in ajith vidaamuyarchi

 

அஜித் குமார், அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக த்ரிஷா கமிட்டாகியுள்ளதாகச் சொல்லப்பட்டது. பின்பு தமன்னாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாகப் பேசப்பட்டது.

 

இப்படத்தின் படப்பிடிப்பு பல முறை தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் சில காரணங்களால் அது ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் பேச்சுக்கள் எழ, "இப்படம் கைவிடப்படவில்லை, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். மேலும் எங்கள் பெருமைமிகு படமாக இது இருக்கும்" என சந்திரமுகி-2 பட இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தெரிவித்தார். 

 

இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்ட நிலையில் அவர் சிறிய வில்லனாம். மெயின் வில்லனாக சஞ்சய் தத் நடிக்கவுள்ளாராம். இவர் தற்போது விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சஞ்சய் தத் அடுத்ததாக அஜித் படத்தில் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்படுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

 

 

Next Story

'ஆண்டனி தாஸ்' - லியோ படக்குழு வெளியிட்ட புது வீடியோ

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

leo sanjay dutt character glimpse

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

சமீபத்தில் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவுபெற்றது. முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்திய படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் படமாக்கி முடித்துள்ளார். படத்தின் முதல் பாடலான 'நா ரெடி...' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இசை வெளியீட்டு விழா செப்டம்பரில் நடக்கவுள்ளதாக அண்மையில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள சஞ்சய் தத் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரின் கதாபாத்திர முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.