sanjay

கன்னட நடிகர்யஷ் நடிப்பில், 2018 ஆம் ஆண்டு கன்னடம், தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி பெரும் வெற்றியடைந்த படம் 'கே.ஜி.எஃப்'. அதிரடி சண்டை காட்சிகள், தெறிக்கும் பின்னணி இசைமற்றும் வசனம் என ஆக்ஷன் சினிமா ரசிகர்களைக் கொண்டாட வைத்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Advertisment

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் கே.ஜி.எஃப்-ன் இரண்டாம் பாகம் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியான நிலையில், கரோனா தொற்று அச்சுறுத்தலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின்னர், ஊரடங்கின் முதலாம் கட்ட தளர்வில், படப் பிடிப்புகளுக்குக்கர்நாடக அரசு அனுமதியளித்த நிலையில், அக்டோபர் 8ஆம் தேதி மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது.

'கே.ஜி.எஃப் - 2' படத்தின் படப்பிடிப்பு, தற்போதுஇறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. புற்றுநோய்க்காக சிகிச்சைபெற்றுவரும்சஞ்சய் தத், படப்பிடிப்பில்கலந்து கொண்டவுடன் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படும் எனவும், அதன்பிறகு படப்பிடிப்பு நிறைவடையும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சஞ்சய் தத்வரும்டிசம்பர் முதல், 'கே.ஜி.எஃப் - 2' படப்பிடிப்பில்கலந்துகொள்ளவிருப்பதாகதகவல்கள்வெளியாகிவுள்ளன. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பிற்காக, விரைவில் ஹைதராபாத்திற்கு வரவிருப்பதாகவும் தகவல்கள்தெரிவிக்கின்றன.'கே.ஜி.எஃப் - 2' படத்தில், ஆதிராஎன்ற வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத்நடிப்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment