Skip to main content

ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கும் சஞ்சய் தத்! 

Published on 15/10/2020 | Edited on 15/10/2020

 

sanjay dutt

 

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ஆக்ஸ்ட் 8ஆம் தேதி கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி அவரது உடல்நலம் சீராகி வீடு திரும்பினார். சஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டி திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்த நிலையில் அவர் தன்னுடைய உடல்நலம் மற்றும் திரைப்பயணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

அதில், "வணக்கம் நண்பர்களே... சில மருத்துவ சிகிச்சைக்காக நான் என் வேலையில் இருந்து ஒரு குறுகிய காலம் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். எனது குடும்பத்தினரும், நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கவலைப்படவோ அல்லது தேவையின்றி யூகிக்கவோ வேண்டாம் என்று எனது நலம் விரும்பிகளைக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன், நான் விரைவில் மீண்டும் வருவேன்" எனக் கூறியுள்ளார்.

 

சஞ்சய் தத் நான்காம் கட்ட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்குப் பலரும் ஆறுதல் தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர்.

 

இந்நிலையில், தற்போது அவர் சிகிச்சை எடுத்து வரும் நிலையில் சஞ்சய் தத் அதிக பலவீனமாக, மெலிந்து, கன்னங்கள் ஒட்டிப் போய் காணப்படும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இதனால் சஞ்சய் தத்தின் ரசிகர்கள், அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனைகள் மேற்கொண்டனர்.

 

இந்நிலையில், சஞ்சய் தத் 'கே.ஜி.எஃப்' படத்திற்காக ஸ்டைல் செய்துகொள்ள பிரபல ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹகீம் சலூனுக்குச் சென்றுள்ளார். அப்போது அவருடன் பேசிய வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிடப்பட்டிருந்தது.

 

Ad

 

அதில், “இந்தப் புற்றுநோயிலிருந்து விரைவில் மீண்டு வருவேன். வீட்டை விட்டு வெளியே வருவது என்றுமே உற்சாகமாக இருக்கும். நான் 'கே.ஜி.எஃப் 2' படத்துக்காக இந்த தாடியை வளர்க்கிறேன். நாங்கள் நவம்பர் மாதம் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறோம். நாளை 'ஷம்ஷேரா' படத்துக்கான டப்பிங் உள்ளது. அது உற்சாகமாகப் போகும்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸில் போட்டி? - சஞ்சய் தத் விளக்கம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
sanjay dutt election issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், லியோ படத்தில் வில்லனாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விரைவில் ஒரு காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் வரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாகவும் தகவல் உலா வந்தது. இந்த நிலையில், இந்த தகவல் குறித்து சஞ்சய் தத் தற்போது விளக்கமளித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் அரசியலுக்கு வருவேன் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை. நான் அரசியலில் இறங்க முடிவு எடுத்திருந்தால், முதலில் முறையாக அறிவிப்பேன். தற்போது என்னைப் பற்றி பரப்பப்படும் செய்திகளை நம்புவதைத் தவிர்க்கவும்” என குறிப்பிட்டுள்ளார். 

சஞ்சய் தத், அரசியல் பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை சுனில் தத், காங்கிரஸ் கட்சி சார்பில் 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். மேலும் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். சஞ்சய் தத் சகோதரி பிரியா தத்தும் எம்.பி.யாக இருந்துள்ளார். அவரது தாயார் மற்றும் நடிகையுமான நர்கிஸும் எம்.பி யாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

விஜய்யைத் தொடர்ந்து அஜித் - மோதத் தயாராகும் சஞ்சய் தத்

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

sanjay dutt to play villan in ajith vidaamuyarchi

 

அஜித் குமார், அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக த்ரிஷா கமிட்டாகியுள்ளதாகச் சொல்லப்பட்டது. பின்பு தமன்னாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாகப் பேசப்பட்டது.

 

இப்படத்தின் படப்பிடிப்பு பல முறை தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் சில காரணங்களால் அது ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் பேச்சுக்கள் எழ, "இப்படம் கைவிடப்படவில்லை, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். மேலும் எங்கள் பெருமைமிகு படமாக இது இருக்கும்" என சந்திரமுகி-2 பட இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தெரிவித்தார். 

 

இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்ட நிலையில் அவர் சிறிய வில்லனாம். மெயின் வில்லனாக சஞ்சய் தத் நடிக்கவுள்ளாராம். இவர் தற்போது விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சஞ்சய் தத் அடுத்ததாக அஜித் படத்தில் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்படுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.