பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'.இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகிவருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கியகதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், டப்பிங் பணியில்படக்குழு தீவிரம் காட்டிவருகிறது.
அந்தவகையில், 'கே.ஜி.எஃப். சேப்டர் 2’ படத்தில் அதீராவாக நடித்துள்ள சஞ்சய் தத், தனது டப்பிங் பணியை முடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தைப் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில்வெளியிட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதுகுறிப்பிடத்தக்கது.
Dubbing sessions completed for our very own #Adheera @duttsanjay, in theatres from April 14th, 2022.#KGFChapter2. pic.twitter.com/o5AdQP7U50
— Hombale Films (@hombalefilms) December 7, 2021