Skip to main content

“இனி ஒருபோதும் ஹிஜாப்பை அகற்ற மாட்டேன்” - சிம்பு பட நடிகை உறுதி

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

Sana Khan reveals why she started wearing hijab

 


பிரபல பாலிவுட் நடிகை சனா கான் தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ள சனா கான் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாகஇருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு முஃப்தி அனஸ் சையது என்பவரை திருமணம் செய்து கொண்ட சனா கான் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார். 

 

இந்நிலையில் தனது வாழ்வின் கடுமையான நாள் குறித்தும், ஹிஜாப் அணிவது குறித்தும் சனா கான் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "என்னுடைய கடந்த கால வாழ்க்கையில் பெயர், புகழ் பணம் என எல்லாம் இருந்தன. ஆனால் நிம்மதி மட்டும் இல்லை. அது மிகவும் கடுமையான நாட்களாக இருந்தன. அந்த மாதிரியான சூழ்நிலையில் தான் எனக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ரமலான் நாளன்று ஒரு கனவு வந்தது. அதில் ஒரு கல்லறையில் நான் இருந்தேன். அது எனக்கு பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. மேலும் அந்த கல்லறையில் ‘உங்களின் கடைசி நாள் ஹிஜாப் அணிந்த முதல் நாளாக இருக்க விரும்பவில்லை’ என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது. மறுநாள் காலையில் நான் எழுந்தபோது எனக்கு பிறந்தநாள். அன்று முதல் நான் ஹிஜாப் அணிய தொடங்கினேன். அன்று முதல் இதை ஒருபோதும் அகற்ற மாட்டேன் என முடிவெடுத்தேன். தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்பு போல் ராம் சரணுக்குக் கிடைத்த கௌரவம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
ram charan get honorary doctorate same like simbu

தெலுங்கு திரையுலகில் பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்து முனனணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த மகதீரா படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ராம் சரணை கோலிவுட் ரசிகரகளிடம் பிரபலமாக்கியது.  

இதையடுத்து மீண்டும் ராஜமௌலி இயக்கத்தில் நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் உலக அளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியது. இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் வென்று இந்தியத் திரையுலகில் சாதனை படைத்தது. 

ராம் சரண் இப்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். புச்சி பாபு சனா இயக்கத்தில் ஒரு படமும், சுகுமார் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் ராம் சரணுக்கு வேல்ஸ் பல்கலைகழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைகழகத்தில் 14வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், திரைப்படத் துறை மற்றும் சமூகத்திற்கு ராம்சரண் ஆற்றிய சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. அப்போது நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் சிம்புவின் சாதனையைக் கவுரவிக்கும் வகையில் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Next Story

சிம்பு குறித்து உலா வந்த தகவலுக்கு முற்றுப்புளி வைத்த பிரபலம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
ashwath marimuthu clarifies to simbu fans

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் உருவாகுவதாக கடந்த 11ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

அந்த வீடியோவில், பிரதீப் ரங்கநாதனும் அஷ்வத் மாரிமுத்துவும் நண்பர்கள் எனவும் இரண்டு பேரும் 10 வருடங்களுக்கு முன்பே இணைந்து படம் பண்ண ஆசைப்பட்டதாகவும் அந்த நினைவுகளைப் பகிரும் வகையில் அமைந்திருந்தது. மேலும் 10 வருடத்திற்கு முன்னால் எடுத்த ஃபோட்டோவை ரீ கிரியேட் செய்து அதே இடத்தில் தற்போது ஃபோட்டோ எடுத்து பகிர்ந்திருந்தனர். 

ashwath marimuthu clarifies to simbu fans

இந்த நிலையில் இப்படத்தில் சிம்பு முதலில் நடிக்கவிருந்து பின்பு பிரதீப் ரங்கநாதனுக்கு வந்துள்ளதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருந்தது. இத்தகவலை தற்போது இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மறுத்துள்ளார். “எல்லா சிம்பு ரசிகர்களுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். சிம்பு சார் என்னை அழைத்து படத்தின் அறிவிப்பு வீடியோவை அவரது ஸ்டைலில் பாராட்டினார். ஓ மை கடவுளே படத்தின் போதும் முதல் ஆளாக அழைத்து ஒன்றரை மணி நேரம் பாராட்டினார். ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். அவருக்காக நான் எழுதிய ஸ்கிரிப்ட் வேறு. அவர் ரெடியாக இருக்கும் போது அப்படம் தொடங்கும்” என குறிப்பிட்டுள்ளார். 

அஷ்வத் மாரிமுத்து அவரது முதல் படமான ஓ மை கடவுளே படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அஷோக் செல்வன், ரிதிகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் 2020ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து தெலுங்கில் ஓ மை கடவுளே படத்தை ரீமேக் செய்தார். இதையடுத்து ப்ரதீப் ரங்கநாதன் படத்தை இயக்குகிறார்.