Skip to main content

“என்னை அடித்து சித்ரவதை செய்தார்”- சிம்பு பட நடிகை பரபரப்பு...

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

கடந்த 2008ஆம் ஆண்டு தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சனாகான். 
 

simbu sanakhan

 

 

இதன்பின் தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். பாலிவுட்டில் மிகவும் பிரபலமான சனா கான், தமிழில் வாய்ப்பு குறைந்ததும் மீண்டும் ஹிந்தி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். 

கடந்த 2012ஆம் ஆண்டு சல்மான் கான் தொகுத்து வழங்கிய ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் சனாகான் மீண்டும் பிரபலமடைந்தார். இதை வைத்து ஹிந்தியில் மீண்டும் ஒரு வலம் வந்தார். 

நடிகை சனா கானும் நடன இயக்குனர் மெல்வின் லூயிஸும் இருவரும் காதலித்து வந்தனர். பின்னர், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துவிட்டனர். 

இந்நிலையில் சனாகான் தன்மீது தொடர்ந்து அவதூறு கூறி பிளாக்மெயில் செய்கிறார் என்று மெல்வின் குற்றம் சாட்டி உள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சனாகான், “நான் பிளாக்மெயில் செய்யவில்லை. காதலை முறித்தபோது அவர் முன்னால் தைரியமாக நின்றேன். அப்போது என்னை சமாதானம் செய்து மனதை மாற்ற முயன்றார். நான் அவரது பேச்சை கேட்கவில்லை. அவர் என்னை அடித்து உதைத்து இருக்கிறார். அப்போது எனது தலையில் ரத்தம் வழிந்தது. முகத்திலும் அடித்து காயப்படுத்தினார். அந்த புகைப்பட ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது.

என்னை அடித்து சித்ரவதை செய்த கொடுமைகளை அம்பலப்படுத்துவேன் என்று அவரிடம் தெரிவித்தேன். அதை பதிவுசெய்து வைத்து நான் பிளாக்மெயில் செய்வதாக குறை சொல்கிறார்” என்று கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரொம்ப அப்டேட் கேட்காதீங்க... தவறான டிசிஷன் எடுக்க வாய்ப்பிருக்கு” - சிம்பு பேச்சு

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

 "Don't ask for too many updates...there is a chance of taking a wrong decision" - Simbu speech

 

சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று நடைபெற்றது.

 

இதில் பேசிய நடிகர் சிம்பு, ''ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். படம் பண்ணிக்கிட்டு இருக்கும்போது அப்டேட் கேக்குறீங்க. நிறைய அப்டேட்ஸ் வேணும்... அப்டேட்ஸ் வேணும்னு கேட்குறீங்க. உங்களுடைய ஆர்வம் எனக்கு புரிகிறது. ஆனால், ஒரு விஷயத்தை இங்கே ஷேர் பண்ணிக்க விரும்புகிறேன். டைரக்டராக இருக்கட்டும், ஹீரோவாக இருக்கட்டும் அந்த படத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு ரொம்ப மெனக்கெட்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் தினமும் ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்க என்று சொல்லும் போது ஒரு தவறான டிசிஷன் எடுக்கக் கூடிய வாய்ப்பு நிறைய இருக்கிறது. அதனால் என்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய ரிக்வெஸ்ட் என்னவென்றால் உங்களை சந்தோசப்படுத்துவது தான் எங்களுடைய முதல் வேலையே.

 

எனவே, எங்களுக்கு அதற்கான களத்தை கொடுத்தீர்கள் என்றால்தான் நல்ல படங்கள் வரும். அதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். எல்லா ரசிகர்களும் ஒரு ஹீரோவை தூக்கி மேல வைப்பாங்க. ஆனால், நான் என்னுடைய ரசிகர்களை தூக்கி மேல வைக்கணும்னு நினைக்கிறேன். என் படத்துக்கு மட்டும் இல்ல. எல்லா படத்துக்கும் ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க. உங்களுக்கு நல்ல படம் கொடுப்பதற்கு நாங்கள் எல்லோரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இது எங்க பத்து தல டைரக்டர் சொல்ல சொன்னாரு. அதனால தான் சொன்னேன்.'' என்றார். 

 

 

Next Story

“இனி ஒருபோதும் ஹிஜாப்பை அகற்ற மாட்டேன்” - சிம்பு பட நடிகை உறுதி

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

Sana Khan reveals why she started wearing hijab

 


பிரபல பாலிவுட் நடிகை சனா கான் தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ள சனா கான் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாகஇருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு முஃப்தி அனஸ் சையது என்பவரை திருமணம் செய்து கொண்ட சனா கான் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார். 

 

இந்நிலையில் தனது வாழ்வின் கடுமையான நாள் குறித்தும், ஹிஜாப் அணிவது குறித்தும் சனா கான் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "என்னுடைய கடந்த கால வாழ்க்கையில் பெயர், புகழ் பணம் என எல்லாம் இருந்தன. ஆனால் நிம்மதி மட்டும் இல்லை. அது மிகவும் கடுமையான நாட்களாக இருந்தன. அந்த மாதிரியான சூழ்நிலையில் தான் எனக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ரமலான் நாளன்று ஒரு கனவு வந்தது. அதில் ஒரு கல்லறையில் நான் இருந்தேன். அது எனக்கு பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. மேலும் அந்த கல்லறையில் ‘உங்களின் கடைசி நாள் ஹிஜாப் அணிந்த முதல் நாளாக இருக்க விரும்பவில்லை’ என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது. மறுநாள் காலையில் நான் எழுந்தபோது எனக்கு பிறந்தநாள். அன்று முதல் நான் ஹிஜாப் அணிய தொடங்கினேன். அன்று முதல் இதை ஒருபோதும் அகற்ற மாட்டேன் என முடிவெடுத்தேன். தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.