Skip to main content

'ஜப்பானே சொல்லும்போது நாம எப்படி நடந்துக்கணும்' - சமுத்திரக்கனி வருத்தம்!

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

ஸ்டண்ட் யூனியனின் 52 ஆம் ஆண்டு விழா சென்னையில் நடை பெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் எஸ்.தாணு, சமுத்திரகனி, ஜாக்குவார் தங்கம், தடா சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்று சங்கத்தை சுற்றியுள்ள இடங்களில் மரக் கன்றுகளை நட்டு வைத்தார்கள். மூத்த ஸ்டண்ட் மாஸ்டர்கள் 5 பேர், மூத்த ஸ்டண்ட் நடிகர்கள் 5 பேரையும் கெளரவப் படுத்தினர். அப்போது விழாவில் நடிகர் சமுத்திரகனி பேசும்போது....

 

samuthirakani

 

"இப்போ இங்கே நுழையும்போதே காசு கொடுத்து வாங்கிய தண்ணீர் பாட்டிலை கொடுத்தார்கள். காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலைக்கு இந்த தலைமுறையினரே தள்ளப்பட்டு விட்டோம். இப்படியே போனால் அடுத்த தலைமுறையினரின் கதி என்னவாகும் என்று யோசித்து பார்க்க வேண்டும். ஒவ்வொருத்தரும் மரம் நடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மரங்களை வெட்டாதீர்கள். அந்த மரங்கள் தான் எங்கள் நாட்டை பாதுகாக்கும் அரண் போல இருக்கு. எங்கள் நாடு இயற்கையிலிருந்து பாதுகாக்கப் படுவதே அந்த மரங்கள் தான். அதை பாதுகாக்க நாங்கள் பண உதவி செய்கிறோம் என்று ஜப்பான் அரசாங்கம் நமக்கு உதவி செய்கிறது. நம்ம நாட்டு மரங்கள் இன்னொரு நாட்டுக்கும் உதவியா இருக்குன்னு அவங்களே சொல்லும் போது நாம எப்படி பாதுகாக்கணும். நாளைய தலைமுறை வாழ நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும்" என்றார். விழாவில் ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள் பங்கேற்றனர். விழாவிற்கு வந்தவர்களை தலைவர் சுப்ரீம் சுந்தர் மற்றும் செயலாளர் பொன்னுசாமி பொருளாளர் ஜான் மற்றும் நிர்வாகக் குழுவினர் வரவேற்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வடிவேலுக்கு சமுத்திரக்கனி  கண்டனம்...

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த படம் 23ஆம் புலிகேசி. இந்த படம் வெளியான சமயத்தில் நல்ல வெற்றியை பெற்றது. இப்படத்தை இயக்குனர் ஷங்கர் தன்னுடைய எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தார்.
 

samuthrakani

 

 

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 24ஆம் புலிகேசி என்ற தலைப்பில் உருவாக்க இருப்பதாக கடந்த ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. பழைய படத்தின் அதே கூட்டணியில் உருவாக இருந்த படத்தில் லைகா நிறுவனமும் இணைந்திருந்தது. 
 

ஷூட்டிங் தொடங்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே சில பிரச்சனைகள் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. நீண்ட நாட்களாக இப்படத்தின் பிரச்சனை முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே போக, இதன் காரணமாக வடிவேலு மற்ற படங்களில் நடிக்கத் தடை விதித்துள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.
 

சமீபத்தில் தனியார் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த வடிவேலு, இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் சிம்பு தேவனை கடுமையாக விமர்சித்திருந்தார். இது சினிமாத்துறையில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பேச்சுக்கு சில திரை பிரபலங்கள் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 

இந்நிலையில், “அண்ணன் வடிவேலு பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தைகளால் பேசியிருப்பது, பெரும் வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது. சிம்புவின் க்ரியேட்டிவ், ‘புலிகேசி’ தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி.

 

 

Next Story

"சினிமா இது தான் என்று கற்றுக் கொடுத்த நண்பன்"- சமுத்திரக்கனி உருக்கம்...

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

மே-1 உழைப்பாளர் தினத்தன்று பல்வேறு பிரபலங்கள், பல்வேறு விதமாக உழைப்பாளர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்கள். சமுத்திரக்கனி உழைப்பாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு, தன்னுடைய நண்பரும் நடிகருமான ஸ்ரீமனின் உழைப்பு குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் ஸ்ரீமன் தனது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான நண்பர் என்று பேசியுள்ளார். ஸ்ரீமன் குறித்து சமுத்திரக்கனி பேசியிருப்பது.
 

samuthrakani


“அனைவருக்கும் எனது உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள். இன்றைக்கு எனக்கு தெரிந்த உழைப்பாளியைப் பற்றி பேசுவதில் அவ்வளவு சந்தோஷம். நான் சென்னை வந்து இறங்கியவுடன், எனக்கு கிடைத்த முதல் நண்பன். வழிகாட்டி என்று கூட சொல்லலாம்.
 

அவனுடைய பைக்கில் என்னை ஒவ்வொரு ஷுட்டிங் ஸ்பாட்டுக்காக கூட்டிப் போய் சினிமா இது தான் என்று கற்றுக் கொடுத்த நண்பன். ஒரு கட்டத்தில் நான் அப்படியே வளர ஆரம்பித்தவுடனே, சரி இனி நமக்கு இவன் தேவையில்லை என்று என்னைவிட்டு கடந்து வெகுதூரம் போய்விட்டான். என்னோட வெற்றியையும், உழைப்பையும் பார்த்து ரசித்த ஒரு நண்பன். அவன் தான் ஸ்ரீமன். அவனை பற்றி பேசுவதற்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு.
 

நான் இயக்குநராகப் போகிறேன் என்றவுடன் ஸ்ரீமனிடம் தான் கேட்டேன். நீ சினிமாவில் நடிச்சுட்டு இருக்க, ஆனால் நான் சின்னத்திரையில் ஒரு ப்ராஜக்ட் பண்றேன். அதில் நீ நடிக்கணும்டா என்று கேட்டேன். உடனே வர்றேன் மாமா என்று வந்து நடித்தான். நான் முதன் முதலில் ஆக்‌ஷன் கட் சொன்னது ஸ்ரீமனுக்கு தான்.  இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
 

இப்போது காஞ்சனா 3 பார்த்தேன். அப்படத்தைப் பற்றி என்ன விமர்சனம் வேண்டுமானாலும் இருக்கலாம். தியேட்டரிலேயே ஒரு மேஜிக் நடந்தது. என் குழந்தைகள் சத்தம் போட்டு சிரித்தார்கள். திரையரங்குகள் திருவிழா கோலம் போல் இருந்தது. அதில் ஸ்ரீமனின் நடிப்பைப் பார்த்து ஒரு இடத்தில் நின்றுவிட்டேன். ஸ்ரீமன் அடிச்ச கமெண்ட்டை நினைத்து நினைத்து சிரிச்சுக்கிட்டே இருக்கேன். படம் ஓடிக்கொண்டிருந்தது. என்னோடு வந்தவர்கள் எல்லாம் அது போய் 20 நிமிஷன் ஆச்சு, இன்னும் ஏன் சிரிச்சுட்டு இருக்க என்று கேட்டார்கள். அது தான் பாதிப்பு.
 

devarattam


அந்தளவுக்கு நடிப்பில் ஆழமாக வந்து நிற்கிற ஸ்ரீமனைப் பார்க்கும் போது, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னும் நிறைய ஜெயிக்கணும். நான் முதலில் எழுதிய கதை 2 ஹீரோ சப்ஜெக்ட். அதில் ஸ்ரீமன் ஒரு ஹீரோ. அக்கதையை எடுத்துட்டுப் போய் சொல்லாத இடமே கிடையாது. அது நடக்கவே இல்லை. அக்கதை இன்னும் வைத்துள்ளேன். நான் படம் இயக்க ஆரம்பித்து, ஸ்ரீமனும் நானும் இணைந்து பணிபுரியவில்லை. அந்த நாளுக்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன்.
 

'காஞ்சனா 3' பார்த்துவிட்டு போன் பண்ணி 'மச்சான். எங்கடா இருக்க' என்றேன். அம்மாவுக்கு உடம்பு சரியில்லைடா என்றான். உடனே போய் பார்த்துவிட்டு, அப்பாவை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கும் போது, அதே அன்போடும் பேசினார் அப்பா. நான் முதன்முதலில் சென்னையில் பார்த்த குடும்பம், இன்னும் அப்படியே இருக்கும் என்பதில் பெருமை.
 

அண்ணி என்ற மெகா சீரியல் தொடங்கினேன். இந்த கேரக்டரை அறிமுகப்படுத்த ஒரு பவர்ஃபுல்லா ஒருத்தர் வேண்டும் என்று கே.பி.சார் கேட்டார். அப்பவும் நான் ஸ்ரீமன் என்றேன். அவர் சினிமாவில் பிஸியா இருக்கார், அவரெல்லாம் இதைச் செய்வாரா என்றார். ஒரு நிமிடம் என்று போனில் கேட்டேன். இதோ வர்றேன் மச்சான் என்றான். கே.பி சாரிடம் வர்றேன்னு சொல்லிட்டார் சார் என்றவுடன் நானே இயக்குகிறேன் என்றார். ஸ்ரீமன் நடிப்பதைப் பார்த்து, என்னைப் பார்த்து சந்தோஷப்படுறார். என் வாழ்க்கையில் அண்ணி என்ற மெகா சீரியல் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதை ஆரம்பித்து வைத்ததும் ஸ்ரீமன் தான்.
 

ஒவ்வொரு படத்திலும் அவனைப் பார்ப்பது சந்தோஷமாக இருக்கும். ஒரு விஷயத்தை வடிவமைத்து இதற்குள் நீ இருக்கணும் என்று கொடுத்துவிட்டால், நீ எவ்வளவு ஆழமா அதற்குள் வேலை பார்ப்பாய் என்பது எனக்கு மட்டுமல்ல. தமிழ் திரையுலகில் இருக்கும் அனைத்து இயக்குநர்களூக்குமே தெரியும். உன் திறமைக்கான இடத்தை நீ இன்னும் அடையல. காஞ்சனா மாதிரி இன்னும் 100 வெற்றி திரைப்படங்கள் வரும். நீ ஆசைப்பட்ட மாதிரி விதவிதமான பெரிய கதாபாத்திரங்கள் நடித்து பெரிய ஆளாக வரணும். உன்னுடைய திறமைக்கு நீ அடைந்திருக்கும் இடம் பத்தாது. வேற வேற வேண்டும். கண்டிப்பாக அதை இறைவன் உனக்கு கொடுப்பார்” என்று கூறியுள்ளார்.