Skip to main content

வடிவேலுக்கு சமுத்திரக்கனி  கண்டனம்...

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த படம் 23ஆம் புலிகேசி. இந்த படம் வெளியான சமயத்தில் நல்ல வெற்றியை பெற்றது. இப்படத்தை இயக்குனர் ஷங்கர் தன்னுடைய எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தார்.
 

samuthrakani

 

 

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 24ஆம் புலிகேசி என்ற தலைப்பில் உருவாக்க இருப்பதாக கடந்த ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. பழைய படத்தின் அதே கூட்டணியில் உருவாக இருந்த படத்தில் லைகா நிறுவனமும் இணைந்திருந்தது. 
 

ஷூட்டிங் தொடங்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே சில பிரச்சனைகள் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. நீண்ட நாட்களாக இப்படத்தின் பிரச்சனை முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே போக, இதன் காரணமாக வடிவேலு மற்ற படங்களில் நடிக்கத் தடை விதித்துள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.
 

சமீபத்தில் தனியார் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த வடிவேலு, இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் சிம்பு தேவனை கடுமையாக விமர்சித்திருந்தார். இது சினிமாத்துறையில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பேச்சுக்கு சில திரை பிரபலங்கள் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 

இந்நிலையில், “அண்ணன் வடிவேலு பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தைகளால் பேசியிருப்பது, பெரும் வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது. சிம்புவின் க்ரியேட்டிவ், ‘புலிகேசி’ தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்னைவிட வடிவேலு சோ க்யூட்”- ராஷ்மிகா ட்வீட்

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

கடந்த 2016ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி செம ஹிட்டான படம் கிரிக் பார்டி. இந்த படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ராஷ்மிகா மந்தானா. கீதா கோவிந்தம் என்னும் தெலுங்கு படத்தில் தன்னுடைய வெகுளியான நடிப்பால பலரின் மனதை கொள்ளை கொண்டார். தற்போது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக மிகவும் இளம் வயதிலேயே வளர்ந்து நிற்கிறார். 
 

rashmika

 

 

தற்போது வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுடன்  ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வரும் படம் பீஷ்மா. இது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படத்தின் புரொமோஷனின்போது ராஷ்மிகா மந்தானா கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அது செமையாக வைரலானது. இந்நிலையில் அவருடைய ஒவ்வொரு போஸிற்கும் ஏற்றார்போல வடிவேலு புகைப்படத்தை வைத்து மீம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

அதை ட்விட்டரில் பகிர்ந்து, “என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. வடிவேலு சோ க்யூட்” என்று பகிர்ந்துள்ளார். 

 

 

Next Story

வடிவேலுவால் கமலின் அடுத்த படம் வெளியாவதில் சிக்கல் ?

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் பிரச்சனைகளை வடிவேலு தற்போது தீர்த்துவிட்டு சினிமாவில் மீண்டும் ஒரு வலம் வருவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில் மேலும் ஒரு பிரச்சனையில் வடிவேலு சிக்கியிருக்கிறார்.
 

vadivelu

 

 

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படத்தை கமல் இயக்கி, நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் வடிவேலுவையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ஆர்கேவிடம் வடிவேலு, ‘நானும் நீயும் நடுவுல பேயும்‘ என்கிற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு முன்பணமாக ஒரு கோடி ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். அந்த படத்தில் கதை சரியில்லை என்று பல மாறுதல்களையும் செய்துள்ளார். இதுபோல நாட்களை வடிவேலு கடத்தியுள்ளார். இதனால், படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்துள்ளது. எனவே, கொடுத்த முன்பணம் ஒரு கோடி ரூபாயைத் திரும்பக் கேட்டுள்ளார் நடிகர் ஆர்.கே. அதையும் வடிவேலு திரும்ப அளிக்கவில்லை. இதையே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆர்.கே. புகாராகக் கொடுத்துள்ளார். 

அந்தப் புகாரில், ‘‘தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு நடிக்கட்டும். அதில் எவ்விதப் பிரச்சினையுமில்லை. ஆனால், எனக்குக் கொடுக்க வேண்டிய 1 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு நடிக்கிறாரா என்று இன்னும் அதிகாரப்பூர்வ தகவலே வெளியாகாத நிலையில் தலைவன் இருக்கின்றான் படத்திற்கு வடிவேலுவால் வெளியாவதில் வந்துள்ளது.