ADVERTISEMENT

திருமணத்திற்கு பிறகு வெற்றிகரமாக யூ டர்ன் அடிக்கும் சமந்தா 

06:43 PM Jun 22, 2018 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருமணத்துக்கு பிறகு பெரும்பாலான நடிகைகள் சினிமாவை விட்டு ஒதுங்கும் நிலையில் நடிகை சமந்தா மட்டும் விதிவிலக்காக இன்னமும் முன்னணி கதாநாயகியாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரங்கஸ்தலம், இரும்புத்திரை, நடிகையர் திலகம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்தே இதற்கு காரணம். இதையடுத்து சமந்தா நடிப்பில் மேலும் சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் மற்றும் யூ-டர்ன் படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன. இதில் யூ-டர்ன் படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகிறது. இதை தொடர்ந்து ன் நடிகை சமந்தா கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிற நிலையில் இவர் அடுத்தாக மீண்டும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை ஒன்றில் நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரிசாயா இப்படத்தை இயக்குவதாகவும், மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT