Skip to main content

சல்மான் கான் படத்தை வெளியிடும் விஸ்வாசம் விநியோகஸ்தர்...

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

சல்மான்கான் மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் தபாங். இப்படம் வெளியாகி செம ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து 2012ல் தபாங் 2 படத்தை வெளியிட்டனர். இதுவும் வசூலில் பல சாதனைகளை படைத்தது. 
 

salman khan

 

 

தற்போது சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா, சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் தபாங் 3 உருவாகி வருகிறது. இந்த படத்தை சல்மான் தான் தயாரித்தும் வருகிறார்.
 

இந்த மூன்றாம் பாகம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் மூன்று மொழிகளில் வெளியாகும் என்று படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தமிழக வெளியீட்டு உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழகத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளையுமே கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ்தான் வெளியிடவுள்ளது.
 

இப்படம் வெளியாகும் அதே தினத்தில்தான் சிவகார்த்திகேயனை வைத்து கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்துள்ள ஹீரோ படமும் வெளியாகிறது. இந்த வருட பொங்கலுக்கு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் விநியோக உரிமையை வாங்கியது கே.ஜே.ஆர் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சல்மான் கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Shooting in front of Salman Khan house!

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பின்பு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.  சல்மான் கனுக்கு ஒயிட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு  நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது