Skip to main content

“அதற்காக நான் உண்மையாக மன்னிப்பு கேட்கிறேன்” - பிக்பாஸ் சாக்‌ஷி வருத்தம்

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனிலும் கமல் ஹாசன்தான் தொகுத்து வழங்குகிறார்.  
 

sakshi

 


இந்த நிகழ்ச்சியை மக்கள் பலரும் பார்த்து வருகிறார்கள் என்று கமல் ஹாசன் உள்ளே பங்குபெற்றிருக்கும் போட்டியாளர்களுக்கு அறிவுரை செய்வார். மக்கள் பலரும் பார்க்கும் நிகழ்ச்சியாக இது இருப்பதனால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் வரை வந்துள்ளது.

இந்நிலையில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் 74-வது நாளில் போட்டியாளர்கள் வனிதாவிற்கும் ஷெரினுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது வனிதா, ஷெரின் தர்ஷனுடன் காதலில் உள்ளதாக தெரிவித்தார்.

இதனால், கோபமடைந்த ஷெரின் வனிதாவிடம் சண்டையிட்டுவிட்டு தனியா சென்று அழுது கொண்டிருந்தார். அப்போது அவரை சமாதானம் செய்வதற்காக சென்ற சாக்‌ஷி, நாய்கள் ரோட்ல குரைக்கும் அத பத்தி கவலைப்படுவியா என்றும்.. நான் வெளியே இருக்கும் மக்களைத் தான் பேசுகிறேன், பேசுபவர்கள் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த பல இணையவாசிகள் எப்படி அவர் மக்களை நாய்கள் என்று சொல்லலாம் என்று சமூக வலைதளத்தில் கண்டனங்களை பதிவிட்டனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ள சாக்‌ஷி ட்விட்டரில் மன்னித்துவிடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். அதில், “அனைத்து பிக் பாஸ் பார்வையாளர்களுக்கும், எனது வார்த்தைகள் உங்கள் உணர்வைப் புண்படுத்தியிருக்கலாம் என்பதை நான் இப்போது புரிந்துகொண்டேன். அதற்காக நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

எனது அறிக்கை பார்வையாளர்களைப் பொதுமைப்படுத்துவதாக இல்லை. இது ஷெரினை ஆறுதல்படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான பழமொழி. உங்கள் அனைவரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. எதிர்காலத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன் என்று அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் எனக்கு எப்போதும் கிடைத்த அன்பு, ஆதரவு மற்றும் கருத்தை நான் மதிக்கிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன். நீங்கள் என் குடும்பத்தைப் போன்றவர்கள். அதனால் நான் தற்செயலாகத் தவறு செய்திருந்தால் ப்ளீஸ் என்னை மன்னித்து எனக்கு ஆதரவளிக்கவும்" என்று தெரிவித்துள்ளார் சாக்‌ஷி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மாற்றங்கள் வரும்... பாசிட்டிவாக யோசிப்போம்" - சாக்‌ஷி அகர்வால்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

sakshi agarwal about wrestlers protest

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். 

 

இதையடுத்து டெல்லி போலீசார் பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர். இருப்பினும் சரண் சிங் மீது கைது உள்ளிட்ட எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம் என வீராங்கனைகள் அறிவித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் சந்தித்தார். அப்போது 5 நாட்கள் கால அவகாசம் தருமாறு மல்யுத்த வீரர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து  விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாத் இந்த விவகாரம் குறித்து பரிசீலிக்க ஜூன் 9 வரை மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கி கெடு விதித்து இருந்தார். நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மக்கள் உள்பட திரைப் பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வந்தனர். 

 

இந்நிலையில் நடிகை சாக்‌ஷி அகர்வால் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது, "இந்த விவகாரம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது நாட்டில் நிறைய விஷயங்களுக்கு நிறைய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக பெண்கள் அதிகாரத்துக்கு வருதல்; பாலியல் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் என சொல்லலாம். அதனால் பாசிட்டிவாக யோசிப்போம். சிறந்த நாட்டை உருவாக்க ஒன்றாக உழைத்திடுவோம்" என்றார். 

 

 

Next Story

"மக்களுக்கு தெரியும் யாருக்கு எப்போது அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று..." - ஷாக்சி அகர்வால் 

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

sakshi agarwal talks about people know who to give credit to and when

 

நடிகை ஷாக்சி அகர்வால் தனது திரைத்துறை அனுபவங்கள் பற்றி நக்கீரன் ஸ்டுடியோ யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியிலிருந்து, "சினிமா பற்றி நான் முழுவதுமாக கற்றுக் கொள்ளவில்லை என்றுதான் சொல்லுவேன். திரைத்துறையை பொறுத்தவரை அது பெரிய கடல் போன்றது. அதில் நான் ஒரு சிறிய துளி தான். நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. நிறைய பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த பயணத்தில் ஒவ்வொரு நாளும் ஏற்றம் இறக்கம் இருக்கும். அதனை நம்முடைய தலைக்கு ஏற்றாமல் பயணிக்க வேண்டும்.

 

கெஸ்ட் 2 படம் என்பது அனிமல் த்ரில்லர் படம். கொரோனா தீவிரமாக இருந்தபோது 45 நாட்கள் கொடைக்கானலில் படப்பிடிப்பு இருந்தது. கேரளாவில் 20 நாட்கள் படப்பிடிப்பு இருந்தது. கொடைக்கானல் படப்பிடிப்பு என்பது அசவுகரியமாக தான் இருந்தது. கேரவன் எல்லாம் ரோட்டில் தான் இருக்கும் ஆனால் படப்பிடிப்பு எல்லாம் காட்டுக்கு நடுவில் இருக்கும். ஒவ்வொரு முறையும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றாலும் 2 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். அந்த சூழலில் தான் படப்பிடிப்பு நடந்தது. மிகவும் குளிராக இருக்கும். படப்பிடிப்பின் போது இது தான் சீன் என்று சொன்னார்கள். டயலாக் எல்லாம் மனப்பாடம் செய்துவிட்டு போனால் நேச்சுரலாக இருக்காது என்பதால் ஆன் ஸ்பாட்டில் தான் டயலாக் சொல்லுவார்கள். ஒரு ஷாட்  ஒரே டேக்கில் எடுத்ததை மொத்த படக்குழுவும்  ரசித்த  அந்த நிகழ்வை நான் மறக்க முடியாது.

 

ராஜா ராணி படத்திலிருந்து தற்போது வரைக்கும் உள்ள இந்த கற்றல் அனுபவத்தை ரெண்டு வார்த்தையில் சொல்ல முடியாது. அது ஆறு வருட அனுபவம். ஒரே ஒரு விஷயம் நம்முடைய அர்ப்பணிப்பு, ஒழுக்கம் இதெல்லாம் ரொம்ப முக்கியம். இந்த விஷயங்களை மட்டும் நாம் ஃபாலோ செய்தால் போதும். சில பேர் என்ன நினைக்கிறார்கள் என்றால் நடிகர்கள், நடிகைகள் இப்படி இருப்பார்கள் அப்படி இருப்பார்கள் என்று. திரைத்துறைக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும் யாருக்கு எப்போது அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று." எனத் தெரிவித்தார்.