Skip to main content

காலாவில் என் கதாபாத்திரம்... - சாக்‌ஷி அகர்வால்!

Published on 30/05/2018 | Edited on 31/05/2018
sakshi agarwal


ரஜினி நடிப்பில் உருவான 'காலா' படத்தை பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஜூன் 7ஆம் உலகமெங்கும் வெளியாகயுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தில் நானா பட்டேகர், சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, ஆகியோருடன் சஸ்பென்சான முக்கிய கதாபாத்திரத்தில் சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ளார். 

 

 


'காலா' பட அனுபவம் குறித்து நடிகை சாக்‌ஷி அகர்வால் பேசும்போது... "படத்தில் ரஜினியின் நடிப்பை கண்டு பிரமித்தேன். முதலில் அவருடன் நடிக்க பயந்தேன். பின்னர், அவருடன் பழகிய பிறகு அந்த பயம் போய் விட்டது. வில்லனாக நடித்திருக்கும் நானா பட்டேகர் மிகவும் திறமைசாலி. படப்பிடிப்பில் என்னுடன் பேசிக்கொண்டே படப்பிடிப்பு தளத்தின் செட்டை அப்படியே பத்து நிமிடத்தில் திறமையாக வரைந்து விட்டார். இவருடைய நடிப்பு வேற லவலில் இருந்தது. இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, திரைப்படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இருப்பார். அதுபோல், இந்த படத்திலும் அனைவருக்குமே சிறந்த கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். எனக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பது நீங்கள் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும். நான் யாருக்கு ஜோடி என்பதையும் தற்போது சொல்ல முடியாது" என சஸ்பென்ஸுடன் பேசி முடித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரு மாதத்துக்கு தமிழ்நாடு திரும்ப வாய்ப்பு இல்லை' - ரஜினிகாந்த்  

Published on 16/06/2018 | Edited on 16/06/2018
rajini


பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கடந்த ஜூன் 7ஆம் தேதி வெளியான ரஜினியின் 'காலா' படம் உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனைகள் நிகழ்த்தி வருகிறது. இதில் ரஜினி நில உரிமைக்காக போராடுபவராக நடித்துள்ளார். இதையடுத்து ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்காக இவர் டார்ஜிலிங் சென்று அங்கு படபிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பில் இருந்த ரஜினி அங்குள்ள செய்தியாளர்களிடம் காலா குறித்தும், இப்படத்தை குறித்தும் பேசியபோது... "காலா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுக்க பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகாவிலும் அந்த மாநில அரசின் ஒத்துழைப்போடு நன்றாக ஓடுகிறது" என்றார். மேலும் தான் ஒரு மாதத்துக்கு தமிழ்நாடு திரும்ப வாய்ப்பு இல்லை என்றும் டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நடைபெறும் படப்பிடிப்பை முடித்த பிறகே சென்னை திரும்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


 

Next Story

'காலா' - விற்கு அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை 

Published on 13/06/2018 | Edited on 14/06/2018
kaala


சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியான 'காலா' படம் மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இதற்கிடையே 'காலா' படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதையடுத்து தியேட்டர்களில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக தீவிரமாக கண்காணிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காலா படத்துக்கு கூடுதல் கட்டணம், பார்க்கிங் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் சட்ட அமலாக்க அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்று நீதிபதிகள் எச்சரித்து உள்ளனர். இதனால் அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.