Skip to main content

“இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்”- நடிகை சாக்‌ஷி நன்றி!

Published on 01/07/2020 | Edited on 01/07/2020

 

sakshi agarwal

 

இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா அடிக்கடி அத்துமீறி நுழைந்து பதற்றத்தை ஏற்படுத்துவருகிறது. அண்மையில் லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவமும் இந்திய ராணுவமும் மோதிக்கொண்டதில் 20 இந்திய வீரர்கள் பலியானதாக சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் பலரும் சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.

 

சில நாட்களுக்கு முன் நடிகை சாக்‌ஷி அகர்வால், தன்னை டிக்டாக்லிருந்து விலக்கிக் கொண்டு சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீனத் தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

 

இந்நிலையில். மத்திய அரசு டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை விதித்திருப்பதை அறிந்து மத்திய அரசிற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால்

 

இது இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய முடிவு என்றும், இந்த முடிவு இந்தியாவின் சுயசார்பு திறனை மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மாற்றங்கள் வரும்... பாசிட்டிவாக யோசிப்போம்" - சாக்‌ஷி அகர்வால்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

sakshi agarwal about wrestlers protest

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். 

 

இதையடுத்து டெல்லி போலீசார் பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர். இருப்பினும் சரண் சிங் மீது கைது உள்ளிட்ட எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம் என வீராங்கனைகள் அறிவித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் சந்தித்தார். அப்போது 5 நாட்கள் கால அவகாசம் தருமாறு மல்யுத்த வீரர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து  விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாத் இந்த விவகாரம் குறித்து பரிசீலிக்க ஜூன் 9 வரை மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கி கெடு விதித்து இருந்தார். நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மக்கள் உள்பட திரைப் பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வந்தனர். 

 

இந்நிலையில் நடிகை சாக்‌ஷி அகர்வால் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது, "இந்த விவகாரம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது நாட்டில் நிறைய விஷயங்களுக்கு நிறைய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக பெண்கள் அதிகாரத்துக்கு வருதல்; பாலியல் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் என சொல்லலாம். அதனால் பாசிட்டிவாக யோசிப்போம். சிறந்த நாட்டை உருவாக்க ஒன்றாக உழைத்திடுவோம்" என்றார். 

 

 

Next Story

"மக்களுக்கு தெரியும் யாருக்கு எப்போது அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று..." - ஷாக்சி அகர்வால் 

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

sakshi agarwal talks about people know who to give credit to and when

 

நடிகை ஷாக்சி அகர்வால் தனது திரைத்துறை அனுபவங்கள் பற்றி நக்கீரன் ஸ்டுடியோ யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியிலிருந்து, "சினிமா பற்றி நான் முழுவதுமாக கற்றுக் கொள்ளவில்லை என்றுதான் சொல்லுவேன். திரைத்துறையை பொறுத்தவரை அது பெரிய கடல் போன்றது. அதில் நான் ஒரு சிறிய துளி தான். நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. நிறைய பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த பயணத்தில் ஒவ்வொரு நாளும் ஏற்றம் இறக்கம் இருக்கும். அதனை நம்முடைய தலைக்கு ஏற்றாமல் பயணிக்க வேண்டும்.

 

கெஸ்ட் 2 படம் என்பது அனிமல் த்ரில்லர் படம். கொரோனா தீவிரமாக இருந்தபோது 45 நாட்கள் கொடைக்கானலில் படப்பிடிப்பு இருந்தது. கேரளாவில் 20 நாட்கள் படப்பிடிப்பு இருந்தது. கொடைக்கானல் படப்பிடிப்பு என்பது அசவுகரியமாக தான் இருந்தது. கேரவன் எல்லாம் ரோட்டில் தான் இருக்கும் ஆனால் படப்பிடிப்பு எல்லாம் காட்டுக்கு நடுவில் இருக்கும். ஒவ்வொரு முறையும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றாலும் 2 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். அந்த சூழலில் தான் படப்பிடிப்பு நடந்தது. மிகவும் குளிராக இருக்கும். படப்பிடிப்பின் போது இது தான் சீன் என்று சொன்னார்கள். டயலாக் எல்லாம் மனப்பாடம் செய்துவிட்டு போனால் நேச்சுரலாக இருக்காது என்பதால் ஆன் ஸ்பாட்டில் தான் டயலாக் சொல்லுவார்கள். ஒரு ஷாட்  ஒரே டேக்கில் எடுத்ததை மொத்த படக்குழுவும்  ரசித்த  அந்த நிகழ்வை நான் மறக்க முடியாது.

 

ராஜா ராணி படத்திலிருந்து தற்போது வரைக்கும் உள்ள இந்த கற்றல் அனுபவத்தை ரெண்டு வார்த்தையில் சொல்ல முடியாது. அது ஆறு வருட அனுபவம். ஒரே ஒரு விஷயம் நம்முடைய அர்ப்பணிப்பு, ஒழுக்கம் இதெல்லாம் ரொம்ப முக்கியம். இந்த விஷயங்களை மட்டும் நாம் ஃபாலோ செய்தால் போதும். சில பேர் என்ன நினைக்கிறார்கள் என்றால் நடிகர்கள், நடிகைகள் இப்படி இருப்பார்கள் அப்படி இருப்பார்கள் என்று. திரைத்துறைக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும் யாருக்கு எப்போது அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று." எனத் தெரிவித்தார்.