Advertisment

"உடல் ரீதியாக மட்டுமல்ல..." - ‘மீ டூ’ குறித்து சாய் பல்லவி

sai pallavi about mee too

சாய் பல்லவி கடைசியாக 'கார்கி' படத்தில் நடித்திருந்தார். பாலியல் குற்றத்தைப் பற்றி பேசியிருக்கும் இப்படம் கடந்த வருடம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' படத்தில் நடித்து வருவதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இதில் பழங்குடியின பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c431e4da-bea2-4105-88c2-ee1c34d329f9" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300_54.jpg" />

Advertisment

இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் தனது சினிமா அனுபவங்களைப் பற்றி பேசிய சாய் பல்லவி மீ டூ முன்னெடுப்பு குறித்தும் பேசியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் "உடல் ரீதியாக மட்டுமல்ல வார்த்தைகளால் திட்டி ஒருவரை அசௌகரியமாக உணர வைப்பதும் ஒரு வகையான துன்புறுத்தல் தான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஆவணம் செய்ய எளிதாக இருக்கும் வழிதான் மீ டு. இதன் மூலம் பல பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை பொது வெளியில் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

me too sai pallavi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe