ADVERTISEMENT

த்ரில்லர் படத்தில் மிரட்டும் நான்கு கதாநாயகிகள்

07:06 PM Dec 04, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

அறிமுக இயக்குநர் கிரிதரன் இயக்கத்தில் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் இணைந்து நடிக்கவுள்ளனர். த்ரில்லர் கதையை மைய்யமாக வைத்து உருவாகும் இப்படத்தை சங்கர் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குனராகவும் பணியாற்றுகிறார்கள்.

இந்நிலையில் படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில், இதில் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT